செவ்வாய், 30 ஜூன், 2026

வகுப்பு:12 பிறகு ஒருநாள் கோடை, நெடுநல்வாடை

 நாள் :            06.07.26 முதல் 10.07.26.


வகுப்பு        : மேல்நிலை இரண்டாம் ஆண்டு


பாடம்   :தமிழ்


தலைப்பு    : பிறகு ஒருநாள் கோடை, நெடுநல்வாடை


கற்றல் நோக்கம்


  •  வேறுபட்ட காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல் செயல்களின் வாயிலாக வெளிப்படும் பருவ கால வாழ்க்கை முறையை தற்காலத்தோடு இணைத்து அறிந்து வெளிப்படுத்தும் தன்மை பெறுதல் 


  •  பழந்தமிழர் திணை வாழ்வைச் சங்கப் புலவர்கள் கவிதையாக்கிய நயத்தை உணர்தல்


துணைக்கருவிகள்.


  •  விளக்கப்படம் ,படத்தொகுப்பு ,காணொளி

ஆர்வமூட்டல் *

  •  பருவ காலங்கள் பற்றி கூறு 

  • மழை நாளில் உனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கூறு..


  • * பத்துப்பாட்டு நூல்களின் பெயர்களைத் கூறு.

 இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.



கற்பித்தல் செயல் பாடுகள்.

  • மழை இல்லாமல் போனால் ஏற்படும் நிலைகளையும், மழையால் விளையும் நன்மைகளையும் உரைத்தல்

  • மழை வந்தபின் நகரம், செடி கொடி,ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் குறித்தும் விளக்குதல்.


  • நெடுநல்வாடை நூலைப் பற்றிவும். அதன் ஆசிரியரைப் பற்றியும் கூறுதல்.

  •  தலைவனுக்கு நல்வாடையாகவும் தலைவனை பிரிந்து வாடும் தலைவிக்கு நெடு வாடையாகவும் இருக்கும் நெடுநல்வாடையின் பெயர் காரணத்தை விளக்குதல்.

  • கார்காலத்தில் பெய்த மழையால் விலங்குகளும் பறவைகளும், கோவலர். தங்களைக் காத்துக் கொண்ட நிகழ்வை விளக்குதல் 


கற்றல் செயல்பாடுகள்

  •  மழையால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி உரையாடுதல்

  • கவிதையை வாசித்தல்

  • மழை பற்றிய கவிதைகளைக் கூறுதல்

  • நெடுநல்வாடை பாடலைச் சீர் பிரித்து வாசித்தல்


வலுவூட்டல்

  • கடினமான பாடப்பகுதிகளை மீண்டும் கற்பித்தல்


  • வினாக்கள் கேட்டல் சிறப்பாக விடை அளிக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்

  • பாடல் பகுதியை மீண்டும் வாசித்துக் காட்டல்

  •  பாடப்பகுதியில் இடம்பெறும் உறுப்பிலக்கணம் புணர்ச்சி விதிகளை வினாவாக கேட்டும் கரும்பலகையில் எழுத வைத்தும் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டுதல் 



கற்றல் விளைவுகள்


  •  மாறுபட்ட இரண்டு இயற்கை நிகழ்வுகள் இணைகிற போது வெளிப்படும் அழகை கண்டு ரசிக்க கற்றுக் கொள்வர் 


  • நெடுநல்வாடை காட்டும் வாழ்க்கை நிகழ்வையும் இயற்கையோடு இணைந்த பண்பாட்டையும் அறிந்து கொள்வர்

  •  மழையின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பையும் அதிக குளிரினால் ஏற்படும் தாக்கத்தையும் சமாளிக்க கற்றுக் கொள்வர்.

 மதிப்பீடு


எ சி வி

  • இனநிரை பிரித்து புணர்ச்சி விதி தரும்.

  • * பொய்யாவா னம்- இலக்கணக் குறிப்பு தருக.

  •  ஐயப்ப மாதவனின் கவிதை குறும்படம் எது?



ந.சி.வி


  • நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது எப்போது?,

  • .நக்கீரர் பற்றி கூறு?

  •  நெடுநல்வாடை பெயர் காரணம் தருக

உசி.வி.


  • வாடைக்காலத்தில் கோவலர்கள்  எவ்வாறு தம் பாதுகாப்பை தேடினர்?

  •  பருவ காலங்களில் ஏற்படும் மாற்றங்களை குறித்து நும் கருத்துகளைக் கூறு.

குறைதீர்க்கற்றல் :

  •  மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்.


தொடர்பணி:


1. மழை பற்றி கவிதைகளை தொகுக்க 

 2.அண்மையில் ஏற்பட்ட மழைக்கால பாதிப்புகளை குறித்து கட்டுரை வரைக


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக