வகுப்பு :12
விடைக்குறிப்பு
TNPSC TAMIL,PG TRB,TET,11,12,TAMIL,ILAKKANAM
Tet NOTIFICATION PDF LINK :Download
TET SYLLABUS PDF LINK : DOWNLOAD
TET - Onlineல் விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்.*
தாள் - 2 எனில்,
1. Mobile No.
2. E-mail ID
3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png : 40-60 KB)
4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)
5. Community Certificate (Pdf : 250-300 KB)
6. S.S.L.C., Mark sheet (Pdf : 250-300 KB)
7. H.Sc., Mark sheet (Pdf : 250-300 KB)
8. U.G Consolidated / All semesters Marksheets (Pdf : 250-300 KB)
9. U.G. Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)
10. B.Ed., Consolidated / All semesters Marksheets (Pdf : 250-300 KB)
11. B Ed Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)
12. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sign உடன் (Pdf : 250-300 KB)
Emis Id உள்ளவர்கள் அனைவரும் Special Tet தேர்வு எழுதலாம். Trb
*Special TET reg*
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் L. k. G& U. K. G வகுப்புகளுக்காக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 01.09.2025 முன் நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் என்றும் அவர்களது கல்வித் தகுதி விவரங்களை சரிபார்த்தும், இணைத்தும் பணிச்சான்றிதழ் பெற அரசு ஆசிரியர்களுக்கு குறிப்பிட்டுள்ள படிவத்திலேயே இதர விவரங்களையும் இணைத்து அனுப்ப அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முன் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு .பணிப்பதிவேட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியை பதியவும் தொடக்கக் கல்வி இயக்குனர்உத்தரவு: Download Here
*☝️TET எழுத துறை அனுமதி தேவையில்லை - BEO செயல்முறைகள்*
15-11-2025 மற்றும் 16-11-2025 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளில் (தாள் 1 & 2) தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு முடிவுகளை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய முன் அனுமதி அவசியம் இல்லை
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத துறை அனுமதி தேவையில்லை - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஆகியோரின் செயல்முறைகள் கடிதத்தை மேற்கோள் காட்டி கொடுமுடி வர கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
To write TET No Permission Need - BEO Proceedings
*No need to get departmental permission to write TET - BEO Proceedings*
ஆசிரியர் தகுதித்தேர்வு
மாற்றுதிறனாளிகளுக்கான மதிப்பெண் Sc 40%,, MBc ,Dnc,pwd 50 %, General 60% ஆக குறைப்பு அரசானண வெளியிடு
Special TET Service Certificate - Attachment Documents Details - CEO Proceedings
🚨 *Special TET Exam Service Certificate Form Download
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க பணிச்சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்
இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள்
ந.க.எண். 00510/ஆ4 /2026.
நாள்: 18.02.2026.
பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2028 (TET) நடைபெற இருப்பதால், இதற்கு ஆன்லைன் மூலம் (Online) விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றிதழ் (Service Certificate) பதிவேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதால், அப்பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
💢🔥 *TET FOR WORKING TEACHERS ONLINE APPLICATION - 2026 Direct Link*
🔴 *ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சிறப்பு டெட் தேர்வு விண்ணப்பிக்கும் பகுதி தற்போது Open செய்யப்பட்டுள்ளது.*
Direct Link: Click Here
ஹைகூ (குறும்பா)
வடிவமாறுபாட்டில் வசீகர தன்மையுடன் திகழ்ந்துவருவது குறும்பா எனப்படும் ஹைகூ.
இது கால, இட, மன இயல்புகளுக்கு ஏற்ப வடிவத்தில் மாறுபடும். ஆனால், தனக்குரிய அடிப்படைத் தன்மையை இழக்காது.
புதுக்கவிதையைத் தொடர்ந்து தமிழுக்கு அறிமுகம் ஆன கவிதை 'ஹைகூ' கவிதையாகும்.
குறும்பா என்று சொல்லப்படும் இக்கவிதை மரபு, ஜப்பானிய மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது.
ஹைகூவின் வடிவமானது, சொற்சுருக்கம், படிமம், விடுகதை போன்று வினா தொடுத்து விடையளிக்கும் முறை போன்றவற்றை கொண்டதாகும்.
(ஜப்பானியச் சீமான் வீடுகளில் பொழுது போக்காகச் சொல் விளையாட்டு நிகழ்த்தப்பட்டது. அது ஹைகூ வடிவத்தில் இருந்தது.)
ஹைகூவின் வடிவம் ஜப்பானிய மொழியின் மரபுக் கவிதை வகையைச் சேர்ந்ததாகும்.
ஹைகூ முதலடியில் ஐந்து அசைகள்;
இரண்டாம் அடியில் ஏழு அசைகள்;
மூன்றாம் அடியில் ஐந்து அசைகள் எனப் பதினேழு அசைகளைக் கொண்டது;
மூன்று அடிகளைக் கொண்டது.
முதல் வரியானது சாட்டையைக் கையில் எடுக்கும் அமைதியான ஆழ்ந்த கோபம் கொண்டது;
இரண்டாவது வரி, சாட்டையை ஓங்குவது போன்ற நிதானம் கொண்டது;
மூன்றாவது அடி சுழற்றி வீசும் தெறிப்போடு 'நறுக்' கென்று இருக்கும் என்கிறார் நெல்லை சுமணி.
* பௌத்தமதக் கோட்பாடுகளான ஆழ்நிலை தியானம், பற்றறுத்தல், உண்மையைத் தேடல் ஆகிய தத்துவங்களைக் கொண்டது 'ஹைகூ' கவிதைகள்.
* உணர்ச்சிக் குறிப்புகளை, ஒலிக் குறியீடுகளாலும், நிறுத்தக் குறிகளாலும் வெளிப்படுத்துவது இக்கவிதைகளின் முறையாம்.
நேரடியான உவமைகள் ஹைகூவில் இடம் பெறுவதில்லை.
வினா விடை அமைப்புடன் விடுகதை போன்று இருந்தலும் இதன் இயல்பாகும்.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலே ஹைகூ கவிதைகளின் நோக்கமாகும். இதனால் ஹைகூ தற்காலத்து வேகம் நிறைந்த வாழ்க்கையில் வெற்றியைப்பெற்றது.
தமிழில் ஹைகூ
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய வகை கவிதை வடிவங்களை அறிமுகப்படுத்தியவர் சுப்பிரமணிய பாரதி ஆவார்.
புதுக்கவிதைக்கு முதல்படியான வசன கவிதை வடிவில் பாரதி சில கவிதைகளை எழுதினார்.
அதைத் தொடர்ந்து ஹைகூ பற்றித் தனது சுதேசமித்திரன் இதழில் கட்டுரை எழுதினார்.
கல்கத்தாவிலிருந்து வெளியான இதழ் ஒன்றில், உயாநே நோகுசி என்ற ஜப்பானிய இலக்கியவாதி ஹைகூ பற்றிக் கடிதம் வெளியிட்டார். அதுவே, பாரதிக்கு ஹைகூ பற்றி எழுதத் தூண்டுகோலாயிற்று.
ஜப்பானியக் கவிதைகள் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சிறப்புடையன என்று நோகுசி குறிப்பிட்டிருந்தார்.
தமிழில் இத்தகைய உத்தி திருக்குறளிலேயேவழங்கியுள்ளது என்று பாரதி எழுதினார்.
தமிழ் நாடன், லீலாவதி போன்றோர் மொழிபெயர்ப்பு ஹைகூ கவிதைகளை வெளியிட்டுள்ளனர்.
கவிஞர் அப்துல் ரகுமான் 'பால்வீதி' என்ற கவிதைத் தொகுப்பில் ஹைகூ கவிதைகளை வெளியிட்டார்.
முட்டை கொண்டு
திட்டை ஏறும் எறும்புகள்
அவன் எழுத்துக்கள்"
படித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய தன்மையுடையவை இத்தகைய ஹைகூ கவிதைகள்.
அமுத பாரதி, அறிவு மதி, நீலமணி, வைத்திய லிங்கம், கழனியூரன், கலாப்ரியா முதலானோர் ஹைகூ எழுதி வெற்றி பெற்றுள்ளனர்”
"அடுப்பின் நெருப்பெங்கே அதோ எரிகிறது
ஏழையின் வயிற்றில்"
ஜப்பானியக் கவிதை கூறும் தத்துவங்களில் இருந்து சற்று மாறுபட்டுச் சமுதாயச் சிக்கல்களை மையமாக வைத்து தமிழ் ஹைகூ கவிதைகள் எழுதப்பட்டன.
ஈரோடு தமிழன்பன், மின்னு சீனிவாசன், துறவி (பத்மநாபன்) முதலான பெருங்கவிஞர்களும் ஹைகூ கவிதைகளில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்.
'சிறகுகளின் சுவடுகள்' என்ற பெயரில் துறவி (பத்மநாபன்) கவிதைத் தொகுதி,
'சொந்த தேசத்து அகதிகள்' என்ற பெயரில் கோ.வசந்த குமாரின் கவிதை வெளியீடு எனப் பலர் தங்கள் தமிழ் ஹைகூக் கவிதைகளை வெளியிட்டுள்ளனர்.
ஈரோடு தமிழன்பன் புதுக் கவிதையில் சிறந்த பாடல்களை எழுதிப் புகழ் பெற்றவர்.
அவருடைய 'சூரிய பிறைகள்'. மித்ராவின் 'குடையில் கேட்ட பேச்சு' போன்றவை சிறந்த ஹைகூ நூல்களாகும்.
லட்சுமிபாய்
பிள்ளையுடன்
குழந்தைகள் காப்பகத்திற்கு"
மனதில் வெப்பம்
வாயில் புகை
நுரையீரலில் ஒட்டடை ஓட்டை...
போன்ற இக்கவிதைகள் இன்றை சமூகத்தைப் பிரதிபலிக் கின்றன.
கீற்று - நூலில் வேனிலா ஸ்டாலின் 'அரும்புகள்' என்ற தலைப்பில் ஹைகூ கவிதைகள் எழுதியுள்ளார்.
1984 -ல் கவிஞர் அமுதபாரதி 'புள்ளிப் பூக்கள்' என்னும் முதல் ஹைகூ கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.
இன்று சமூக சிக்கல்களைப் பாடுபொருளாகக் கொண்டு ஹைகூ கவிதைகள் பல படைக்கப்பட்டு தொகுப்புகளாக நூலாக்கம் பெற்று வெளிவந்துள்ளன.
புதுக் கவிதையில் பெரும் வெற்றி பெற்ற கவிஞர்கள் ஹை எழுதுவதிலும் தங்கள் திறனைக் காட்டியுள்ளனர். ஹைகூ கவிதைகள் சற்று சிந்தித்துப் புரிந்து இரசிக்கக் கூடியவை