தமிழ் வாழ்க
TNPSC TAMIL,PG TRB,TET,11,12,TAMIL,ILAKKANAM
செவ்வாய், 14 ஜூலை, 2026
நால்வகை பொருத்தாங்கள் வகுப்பு:12 தமிழ் மாதிரிப் பாடக்குறிப்பு
நாள் : 20.07.26 முதல் 24.07.26 வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடம் :தமிழ் தலைப்பு : நால்வகை பொருத்தாங்கள் பாட வேளை :4 கற்றல் நோக்கம்
துணைக்கருவிகள்.
ஆர்வமூட்டல் *
இந்தத் தொடரில் உள்ள தவறு என்ன?
கற்பித்தல் செயல்பாடுகள்.
கற்றல் செயல்பாடுகள்:
கற்றல்விளைவுகள்
வலுவூட்டல்
மதிப்பீடு எ சி வி
ந.சி.வி
உசி.வி.
தொடர்பணி
|
யானை டாக்டர் தமிழ் மாதிரிப்பாடக்குறிப்பு
நாள் : 20-.07.26 முதல் 24.07.26 வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு பாடம் : தமிழ் பாடவேளை :4 தலைப்பு: இயல் 2 இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல் யானை டாகடர் கற்றல் நோக்கம்
துணைக்கருவிகள் விளக்க பட அட்டைகள், https://youtu.be/vhXKNgBzHYQ?si=fwW67n-vbP4jJtPE ஆர்வமூட்டல் :
கற்பித்தல் செயல்பாடுகள்.
கற்றல் செயல்பாடுகள்
கற்றல் விளைவுகள்:
வலுவூட்டல்:
குறைதீர்க்கற்றல் :
மதிப்பீடு: "எளிய சிந்தனை வினா..
நடுத்தர சிந்தனை வினா
1. உயர் சிந்தனை வினா
தொடர் பணி :
|
யா.ஃப்ரீடா, M.A, MA, M.A, M.Ed, M..Phil ,முதுகலை தமிழாசிரியை,அரசு மேல்நிலைப்பள்ளி அயன் குறும்பலாப்பேரி தென்காசி
புதன், 8 ஜூலை, 2026
முதல் கல் வகுப்பு 12
நாள் : 13.07.26 முதல் 17.07.26.
வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பாடம் :தமிழ்
தலைப்பு : முதல் கல்
பாட வேளை :4
கற்றல் நோக்கம்
- கதையின் வாயிலாக வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றும் திறன் பெறுதல்.
துணைக்கருவிகள்.
- விளக்கப்படம் ,படத்தொகுப்பு ,காணொளி
*https://youtu.be/EjgO_jKRtXw?si=QDLJP-yqRCaYcBFL
ஆர்வமூட்டல்
- நம்மைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் சிலவற்றைக் கூறு.
- சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பாய்?
- இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.
கற்பித்தல் செயல்பாடுகள்.
- பயிர்களை வாழவைப்பது மழை. அது பெருமழையாகி வெள்ளமாய்த் திரண்டு தேங்கும்போது, தான் உயிர்ப்பித்த பயிர்களையே அழித்துவிடுகிறது. அது மழையின் குற்றமன்று. வெள்ளம் தேங்காமல் வடிய வழிவகை செய்யாத மனிதனின் குற்றம். பெருவெள்ளத்தை வடியச் செய்யத் தனிமனிதனால் முடியுமா? ஊர்கூடிச் செய்யவேண்டிய பணியல்லவா? என்று எண்ணாமல் தானே இரங்கி செயல்பட வேண்டும்.
- ஒரு செயலை யாராவது செய்வார்களா என்று எண்ணி பொழுதைக் கழிப்பதை விட, நாமே களத்தில் இறங்சி செய்யத் தொடங்கும். போது மற்றவர்கள் நம்மோடு கைக் கோர்த்து செயலை வெற்றியடையச் செய்வர் என்பதை உத்தமசோழன். கதை வழி விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள்:
- கதைப்பகுதியை வாசித்தல்
- நிர்நிலைகளைப் பாதுகாக்கும் முறைப் புற்றி கலந்துரையாடல்.
வலுவூட்டல்
- கதைப்பகுதியை கருப்பொருள் மாறாமல் சுவைக்குன்றாமல் மீண்டும் ஒரு முறை சுருக்கி கூறுதல்
- கதைப்பகுதியை மாணவர்கள் கருப்பொருளுடன் கூறச் செய்தல் சிறப்பாக கூறும் மாணவர்களைப் பாராட்டுதல்
கற்றல் விளைவுகள்
- சொந்த வாழ்விலும் சமூக வாழ்விலும் ஏற்படும் பிரச்சனைகளை பிறரை எதிர்பார்க்காமல் தானே முன் நின்று செய்ய கற்றுக் கொள்வர்
மதிப்பீடு
எ சி வி
- முதல் கல் சிறுகதை ஆசிரியர்….
ந.சி.வி
- முதல்கல் கதையின் கருப்பொருள் என்ன?
உ.சி.வி.
- முதல் கல் கதையில் இடம் பெறும் கதை மாந்தர்களின் பண்புகளை விவரிக்க.
தொடர்பணி:
- மரக்கன்று வழங்கும் நோக்கங்களையும் அதனை வளர்ப்பதால் ஏற்படும் புது நன்மைகளையும் கொண்ட இரு பக்க சிற்றேட்டை உருவாக்குக.
மனோன்மணீயம் வகுப்பு 11
நாள் : 13-.07.26 முதல் 17.07.26 வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு பாடம் : தமிழ் பாடவேளை :4 தலைப்பு: இயல் 2 இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல் செய்யுள்: மனோன்மணீயம் கற்றல் நோக்கம்
துணைக்கருவிகள்
ஆர்வமூட்டல் :
கற்பித்தல் செயல்பாடுகள். மனோன்மணீயம்:
கற்றல் செயல்பாடுகள்
கற்றல் விளைவுகள்:
வலுவூட்டல்:
குறைதீர்க்கற்றல் :
மதிப்பீடு: "எளிய சிந்தனை வினா..
நடுத்தர சிந்தனை வினா
1. உயர் சிந்தனை வினா:
குறைதீர்க்கற்றல் : மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல் தொடர் பணி :
|
யா.ஃப்ரீடா, M.A, MA, M.A, M.Ed, M..Phil ,முதுகலை தமிழாசிரியை,அரசு மேல்நிலைப்பள்ளி அயன் குறும்பலாப்பேரி தென்காசி
செவ்வாய், 30 ஜூன், 2026
வகுப்பு:12 பிறகு ஒருநாள் கோடை, நெடுநல்வாடை
நாள் : 06.07.26 முதல் 10.07.26.
வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பாடம் :தமிழ்
தலைப்பு : பிறகு ஒருநாள் கோடை, நெடுநல்வாடை
கற்றல் நோக்கம்
வேறுபட்ட காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல் செயல்களின் வாயிலாக வெளிப்படும் பருவ கால வாழ்க்கை முறையை தற்காலத்தோடு இணைத்து அறிந்து வெளிப்படுத்தும் தன்மை பெறுதல்
பழந்தமிழர் திணை வாழ்வைச் சங்கப் புலவர்கள் கவிதையாக்கிய நயத்தை உணர்தல்
துணைக்கருவிகள்.
விளக்கப்படம் ,படத்தொகுப்பு ,காணொளி
ஆர்வமூட்டல் *
பருவ காலங்கள் பற்றி கூறு
மழை நாளில் உனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கூறு..
* பத்துப்பாட்டு நூல்களின் பெயர்களைத் கூறு.
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.
கற்பித்தல் செயல் பாடுகள்.
மழை இல்லாமல் போனால் ஏற்படும் நிலைகளையும், மழையால் விளையும் நன்மைகளையும் உரைத்தல்
மழை வந்தபின் நகரம், செடி கொடி,ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் குறித்தும் விளக்குதல்.
நெடுநல்வாடை நூலைப் பற்றிவும். அதன் ஆசிரியரைப் பற்றியும் கூறுதல்.
தலைவனுக்கு நல்வாடையாகவும் தலைவனை பிரிந்து வாடும் தலைவிக்கு நெடு வாடையாகவும் இருக்கும் நெடுநல்வாடையின் பெயர் காரணத்தை விளக்குதல்.
கார்காலத்தில் பெய்த மழையால் விலங்குகளும் பறவைகளும், கோவலர். தங்களைக் காத்துக் கொண்ட நிகழ்வை விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள்
மழையால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி உரையாடுதல்
கவிதையை வாசித்தல்
மழை பற்றிய கவிதைகளைக் கூறுதல்
நெடுநல்வாடை பாடலைச் சீர் பிரித்து வாசித்தல்
வலுவூட்டல்
கடினமான பாடப்பகுதிகளை மீண்டும் கற்பித்தல்
வினாக்கள் கேட்டல் சிறப்பாக விடை அளிக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்
பாடல் பகுதியை மீண்டும் வாசித்துக் காட்டல்
பாடப்பகுதியில் இடம்பெறும் உறுப்பிலக்கணம் புணர்ச்சி விதிகளை வினாவாக கேட்டும் கரும்பலகையில் எழுத வைத்தும் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டுதல்
கற்றல் விளைவுகள்
மாறுபட்ட இரண்டு இயற்கை நிகழ்வுகள் இணைகிற போது வெளிப்படும் அழகை கண்டு ரசிக்க கற்றுக் கொள்வர்
நெடுநல்வாடை காட்டும் வாழ்க்கை நிகழ்வையும் இயற்கையோடு இணைந்த பண்பாட்டையும் அறிந்து கொள்வர்
மழையின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பையும் அதிக குளிரினால் ஏற்படும் தாக்கத்தையும் சமாளிக்க கற்றுக் கொள்வர்.
மதிப்பீடு
எ சி வி
இனநிரை பிரித்து புணர்ச்சி விதி தரும்.
* பொய்யாவா னம்- இலக்கணக் குறிப்பு தருக.
ஐயப்ப மாதவனின் கவிதை குறும்படம் எது?
ந.சி.வி
நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது எப்போது?,
.நக்கீரர் பற்றி கூறு?
நெடுநல்வாடை பெயர் காரணம் தருக
உசி.வி.
வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு தம் பாதுகாப்பை தேடினர்?
பருவ காலங்களில் ஏற்படும் மாற்றங்களை குறித்து நும் கருத்துகளைக் கூறு.
குறைதீர்க்கற்றல் :
- மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்.
தொடர்பணி:
1. மழை பற்றி கவிதைகளை தொகுக்க
2.அண்மையில் ஏற்பட்ட மழைக்கால பாதிப்புகளை குறித்து கட்டுரை வரைக
வகுப்பு :11 ஐங்குறுநூறு, திருக்குறள்
நாள் : 6-.07.26 முதல் 10.07.26.
வகுப்பு : மேல்நிலை முதலாமாண்டு
பாடம் : தமிழ்
பாடவேளை :4
தலைப்பு: இயல் 2 இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல்
செய்யுள்: ஐங்குறுநூறு,
அற இலக்கியம் :திருக்குறள்
கற்றல் நோக்கம்
- இயற்கை மனிதனுக்கு உதவுவதையும் உணர்த்துவதையும் இலக்கியம் வழி அறிந்து மதிப்பளித்தல்
- அற இலக்கியங்களில் உட்பொருளை அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் திறன் பெறுதல்
துணைக்கருவிகள்
- விரைவு குறியீட்டு காட்சிகள். விளக்க பட அட்டைகள்,
ஆர்வமூட்டல் :
- சங்க இலக்கியங்கள் எவை?
- எட்டுத்தொகை நூல்களைக் கூறு.
- உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் எது?
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:
கற்பித்தல் செயல்பாடுகள்.
- இல்லறத்தில் அன்பும் அறனும் சிறக்க வேண்டி தலைவன் பொருளீட்ட வெளியூர் செல்வது பற்றி சங்க பாடல்கள் பேசுவதையும், சங்ககால மக்களின் இயற்கை வாழ்வோடு மலர்கள் பின்னி பிணைந்து இருந்ததையும் அவை பிரிந்து சென்ற தலைவனின் வரவை தலைவிக்கு அறிவிக்கும் நிகழ்வையும் ஐங்குறுநூற்று பாடல் வழி விளக்குதல்
திருக்குறள்
- அற இலக்கியம் ஆகிய திருக்குறள் குறள் வெண்பாவில் அமைந்தது.
- திருக்குறளுக்கு பதின்மர் உரை உள்ளது.திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் திருவள்ளுவமாலை,
- வாழ்வியலுக்கு தேவையான அத்தனை கருத்துக்களையும் கூறும் அற்புதச் சுரங்கம் திருக்குறள்
- பாடப்பகுதியில் இடம் பெற்று இருக்கும் அடக்கமுடைமை, ஒப்புரவறிதல், புகழ், தவம்,நிலையாமை, துறவு,அவ அறுத்தல்,வலியறிதல்,காலமறிதல் ஆகிய அதிகாரங்களில் கூறப்படும் குறள்களின் கருத்துகளை விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள்
- இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களின் அக வாழ்வைக் குறித்து கலந்துரையாடுதல்
- திருக்குறளையும் செய்யுளையும் சீர் பிரித்து வாசித்தல்
கற்றல் விளைவுகள்:
- இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக் கொள்வர்.
- அற இலக்கியமாகிய திருக்குறள் கூறும் கருத்துகளை வாழ்வில் பின்பற்றி மேன்மை அடைய முற்படுவர்
வலுவூட்டல்:
- பாடம் சார்ந்த வினாக்களை மாணவர்களிடம் கேட்டு ஏற்புடைய வகையில் தெளிவாக பதில் அளிக்கும் மாணவர்களை பாராட்டுதல்
- திருக்குறளின் கருத்துக்களை மீண்டும் கூறி ஒவ்வொரு அதிகாரத்திலும் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை மாணவர்களிடம் கேட்டு பதில் அளிக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்
மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
- ஐங்குறுநூறு நூலை தொகுத்தவர் யார்?
- பேயனார் இயற்றிய பாடல்கள் எத்தனை?
- திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள…
நடுத்தர சிந்தனை வினா
1. ஐங்குறுநூறு நூல் குறிப்பு தருக
2. ஐங்குறுநூறு பாடலில் இடம்பெற்றுள்ள பூக்களின் பெயர்களைத் தொகுக்க.
3. மருந்து எது மருந்து மரமாக இருப்பவர் யார்?
உயர் சிந்தனை:
- சொற்பொருள் பின்வருநிலையணியை விளக்குக.
- கொடையில் சிறந்து விளங்க வள்ளுவர் கூறும் வழிகளை விளக்குக.
குறைதீர்க்கற்றல் :
- மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்.
தொடர் பணி :
- தமிழ் இலக்கியங்கள் காட்டும் பூக்கள் குறித்த செய்திகளைத் தொகுக்க.
- படப்பகுதியில் இடம்பெற்றுள்ள குறட்பாக்களில் பயின்று வரும் அணிகளைச் சுட்டுக