தமிழ் வாழ்க
TNPSC TAMIL,PG TRB,TET,11,12,TAMIL,ILAKKANAM
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026
பொருள் மயக்கம் வகுப்பு 12 தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 24 .08.26 முதல் 28.08.26.
வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பாடம் :தமிழ்
தலைப்பு : பொருள் மயக்கம்
பாட வேளை :4
கற்றல் நோக்கம்
- சூழலுக்கு ஏற்ப சொல்லையும் பொருளையும் தொடரையும் பொருத்தமாக பயன்படுத்தும் திறனைப் பெறுதல்
துணைக்கருவிகள்.
- விளக்க அட்டைகள், பணித்தாள்
ஆர்வமூட்டல் *
- எழுத்துப் பிழை தொடர்பிழை என்றால் என்ன?
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.
கற்பித்தல் செயல்பாடுகள்.
- தமிழ் மொழியை எழுதும் போதும் படிக்கும் போதும் பேசும்போதும் சரியான முறையைப் பின்பற்றினால் பொருள் மயக்கம் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும்
- செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்த மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு பொருள்கோள் என்று பெயர் என்பதையும் விளக்குதல்.
கற்றல் செயல்பாடுகள்
- தொடரைச் சேர்த்தும் பிரித்தும் எழுதி தொடரின் பொருளை வேறுபடுத்தி அறிதல்
- வல்லின மெய்யை இட்டும் நீக்கியும் எழுதி பொருள் வேறுபாடு அறிதல்
வலுவூட்டல்
- சில தொடர்களைக் காட்டி சரியாக பொருள் மயக்கம் ஏற்படாமல் எழுத செய்தல் சிறப்பாக எழுதும் மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தல்.
கற்றல் விளைவுகள்
- தொடரைப் பிரித்து பொருள் அறிய கற்றுக் கொள்வர்
- தவறின்றி எழுத வாசிக்க கற்றுக் கொள்வர்
மதிப்பீடு
எ சி வி
- வினைத்தொகையில் வல்லினம்…..
- பொருள்கோள் வகைகள்……
ந.சி.வி
- பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் சிலவற்றைக் கூறு
உசி.வி.
- காற்புள்ளி இடாமல் எழுதுவதால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தந்து விளக்குக
தொடர்பணி:
- தொடர்களைப் பொருள் மயக்கம் இன்றி எழுத வழிகாட்டும் உரைநடை நெறிகளைப் பின்பற்றி ஐந்து தொடர்களை எழுதுக
புதன், 12 ஆகஸ்ட், 2026
வாடி வாசல் தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 17-08.26 முதல் 21.08.26.
வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு
பாடம் : தமிழ்
பாடவேளை :4
தலைப்பு : வாடிவாசல்
கற்றல் நோக்கம்
- தமிழ் மண்ணுக்கே உரிய வீர விளையாட்டுகளின் தொன்மைச் சிறப்பை அறிதல்.
துணைக்கருவிகள்
- வலையொளி, விளக்க பட அட்டைகள்,
ஆர்வமூட்டல் :
- நமது பாரம்பரிய வீர விளையாட்டுகள் சிலவற்றைக் கூறு
- பொங்கல் விழாவில் நடைபெறும் விளையாட்டுகள் சிலவற்றைக் கூறு.
- இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:
கற்பித்தல் செயல்பாடுகள்
- வாடிவாசல் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு
- ஜல்லிக்கட்டில் போருக்குச் செல்லும் வீரனைப் போல் காளைகள் அலங்கரிக்கப்பட்டு உற்சாகமாக வாடிவாசலுக்கு ஆரவார ஒலிக்கு இடையில் சீறிப் பாயும் மாடுகளை ராஜாளி, மாதிரி நிக்குது என்றும் திமிலைப் புடைத்து கொண்டு நிற்கும்
காளையை வருணிப்பதோடு அடக்கிய பாங்கையும் அழகாக கூறுதல்
கற்றல் செயல்பாடுகள்
- வாடிவாசலில் வீரவிளையாட்டாக இருக்கும் ஜல்லிக்கட்டை நம்முடைய முன்னோர்கள். மற்றும் இலக்கியங்கள் எடுத்தியம்பும் பாங்கினை அறிதல்
- கதை பகுதியை நேர்த்தியான முறையில் வாசித்தல்
கற்றல் விளைவுகள்:
- நமது பண்பாட்டின் அடையாளமான வீர விளையாட்டுகளை அறிந்து கொள்வர்.
- வீர விளையாட்டுகளை அறிந்து அதை மதித்து கற்க முற்படுவர்.
வலுவூட்டல்:
- கதையைக் கருப்பொருள் மாறாமல் கூறுதல்
- கதையின் கருவும் பொருளும் மாறாமல் சுவை குன்றாமல் தெளிவாக கூறும் மாணவர்களுக்குப் பரிசளித்து பாராட்டுதல்
மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
- வாடிவாசல் கதையின் ஆசிரியர் யார்
- ஏறு தழுவுதல் பற்றி இடம் பெற்றுள்ள சங்க இலக்கியம் எது
நடுத்தர சிந்தனை வினா
- சி சு செல்லப்பா பற்றி குறிப்பு வரைக.
- வாடிவாசல் கதை பகுதியில் காலை எவ்வாறெல்லாம் வருவதாக வர்ணிக்கப்படுகிறது.
1. உயர் சிந்தனை வினா
- வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்த கருத்துக்களை விளக்குக
- கதையைத் தெளிவாக புரிந்து கொண்ட மாணவர்கள் சிலரை கதையைக் கூறச் சொல்லி விளங்க வைத்தல்
தொடர் பணி :
- நீங்கள் கண்டு களித்த ஏறு தழுவுதல் நிகழ்வின் காட்சிகளை வகுப்பில் நேர்முக வருணனை செய்து காட்டுக
உரிமைத் தாகம்,தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 17 .08.26 முதல் 21.07.26.
வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பாடம் :தமிழ்
தலைப்பு : உரிமைத் தாகம்
பாட வேளை :4
கற்றல் நோக்கம்
- நிலத்தோடு ஒன்றி வாழும் மக்களின் உணர்வுகளை கதைகளில் படித்து கருத்துரைத்தல்
துணைக்கருவிகள்.
- விளக்கப்படம் ,காணொளி
ஆர்வமூட்டல் *
- கிராம மக்களின் அடிப்படை தொழில் எது?
- உறவுகள் பற்றி கூறு.
- இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்.
கற்பித்தல் செயல்பாடுகள்.
- நிலம் சடப்பொருள் அன்று. நிலத்தோடு பேசக்கூடிய மனிதர்கள் இன்றைக்கும் கிராமங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வருவாய் பெரிதாக வரவில்லையென்றாலும் நில உரிமை, நிலம் சார்ந்த வேளாண்மை ஆகியவற்றை ஒரு பண்பாடாகவே கொண்டிருக்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். நிலத்தை உயிருக்கு நிகராகக் கொண்டிருக்கிற பண்பாடு, "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்னும் நமது பழைய பண்பாட்டு மரபை நினைவூட்டுகிறது. நிலத்துடனான உறவு குடும்ப உறவையும் வலுப்படுத்துகிறது என்பதை பூமணியின் உரிமைத் தாகம் கதை வழி விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள்:
- கதைப்பகுதியை வாசித்தல்
- கதைப்பகுதியை கருப்பொருள் மாறாமல் சுவை குன்றாமல் கூறுதல்
வலுவூட்டல்
- கதைப்பகுதியைக் கருப்பொருள் மாறாமல் சுவைக்குன்றாமல் மீண்டும் ஒரு முறை சுருக்கி கூறுதல்
- கதைப்பகுதியை மாணவர்கள் கருப்பொருளுடன் கூறச் செய்தல் சிறப்பாக கூறும் மாணவர்களைப் பாராட்டுதல்
கற்றல் விளைவுகள்
- சொந்த வாழ்விலும் சமூக வாழ்விலும் ஏற்படும் பிரச்சனைகளைப் பிறரை எதிர்பார்க்காமல் தானே முன் நின்று செய்யக் கற்றுக் கொள்வர்.
- உறவின் மேன்மையை உணர்ந்து உறவைப் போற்றக் கற்றுக் கொள்வர்.
மதிப்பீடு
எ சி வி
- உரிமை தாகம் சிறுகதை ஆசிரியர்….
- பூமணி சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினம்…….
ந.சி.வி
- உரிமைத் தாகம் கதையின் கருப்பொருள் என்ன?
உசி.வி.
- உரிமைத் தாகம் கதையில் இடம் பெறும் கதை மாந்தர்களின் பண்புகளை விவரிக்க.
தொடர்பணி:
- வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறவினர்களின் பங்கு முக்கியமானது என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதுக.
புதன், 5 ஆகஸ்ட், 2026
விருந்தினர் இல்லம், கம்பராமாயணம் வகுப்பு 12
நாள் : 10.08.26 முதல் 14.08.26.
வகுப்பு :மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பாடம் :தமிழ்
பாடவேளை :4
தலைப்பு :செய்யுள்
சுற்றத்தார் கண்ணே உள
விருந்தினர் இல்லம், கம்பராமாயணம்
கற்றல் நோக்கம்
இலக்கியத்தில் உறைந்துள்ள
- தமிழர்க்கே உரிய பண்பாட்டுக் கூறுகளைக் காப்பியம்வழிப்
துணைக்கருவிகள்
விரைவு குறியீட்டு காட்சிகள், விளக்க பட அட்டைகள்,
ஆர்வமூட்டல்:
- விடுமுறையில் நீ எங்கு செல்வாய்?
- உறவினர் வீட்டிற்கு நீ செல்லும் போது இங்கு நடக்கும்
உனக்குத் தெரிந்த காவியங்கள் சிலவற்றைக் கூறும்
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:
கற்பித்தல் செயல்பாடுகள்
- இன்பம் துன்பம், வேண்டியது வேண்டாதது எல்லாமே நாம் விரும்பியும் விரும்பாமலும் நம்மை வந்தடைகின்றன. அவற்றை வேறுபடுத்தாமல் ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து வேண்டியதைக் கற்றுக்கொள்வதே நன்று. எல்லாவற்றிலிருந்தும் நல்லவற்றைக் கற்றுக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்.ஓர் ஆனந்தம் சற்று மனச்சோர்வு சிறிது அற்பத்தனம் விழிப்புணர்வு எதிர்பாராத விருந்தாளிகளாக அவ்வப்போது வந்துசெல்லும்.என்பதை பாடல் வழி விளக்குதல்.
கம்பராமயானம்
சிறியோரை இகழ்தல் இலமே என்பது அந்நற்பண்பின்
மலர்ச்சி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது
அவ்வுயிர்ப்பண்பின் முதிர்ச்சி; காக்கை குருவி
எங்கள் ஜாதி என்பது அத்தமிழ்ப்பண்பின் தொடர்ச்சி.
கம்பனின் காவியம் இராமனை இப்பண்பின் படிமமாகப்
படைத்திருப்பது உயர்ச்சி. தந்தை தாய் மீதான அன்பு,
உடன் பிறப்பியம் ஆகியவற்றை, எல்லைகள் அனைத்தையும்
கடந்து இராமன் விரிவுபடுத்துகிறான். வேடன், பறவை,
எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற வேலிகள்
அவன் அன்பிற்கு இல்லை.அனைவரையும் குடும்பமாக
எண்ணி பண்பின் படிமமாக விளங்கும் ராமன் பற்றி
பாடப்பாகுதி வழி விளக்குதல்.
கற்றல் செயல்பாடுகள்
செய்யுளைச் சீர் பிரித்து வாசித்தல், கம்பராமாயணம்வாழ்வில் ஏற்படும் ஆனந்தம், சோர்வு, விழிப்புணர்வு
கற்றல் விளைவுகள்
- வாழ்வில் ஏற்படும் வஞ்சனை, அவமானம்,
எளிய மக்களிடமும் அன்புக்காட்டக் கற்றுக்கொள்வர்.
புணர்ச்சி விதி பகுபத உறுப்பிலக்கணம்
பாடப்பகுதியில் வினாக்கள் கேட்டு சிறப்பாக
விடையளிக்கும் மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டுதல்.
மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா
1.கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்.....
2. விருந்து என்பதன் பொருள் என்ன
நடுத்தர சிந்தனை வினா
1.ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் நடந்த
உரையாடலைக் கூறு.
2.நாகூர் ரூமி எவற்றை வாயிலுக்கே சென்று
வரவேற்க வேண்டும் என்று கூறிகிறார்?
உயர் சிந்தனை வினா
1.குகனோடு ஜவராகி விடணனோடு எழுவரான
நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக
2.வருபவர் எவராயினும் நன்றி செலுத்து"
இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
குறைதீர்க்கற்றல்
- மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில்
அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை
விளக்கி கூறுதல்.
தொடர் பணி
உங்கள் மனம் கவர்ந்த கம்பராமாயண பாத்திரம் யார்?
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026
காவடிச்சிந்து, குறுந்தொகை தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 10.08.26 முதல் 14.08.26.
வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு
பாடம் : தமிழ்
பாடவேளை :4
தலைப்பு : இயல் 3
செய்யுள் : காவடிச் சிந்து, குறுந்தொகை
கற்றல் நோக்கம்
- இலக்கியங்கள்வழி தமிழர் பண்பாட்டுக்கூறுகளை அறிந்து தமதாக்கிக்கொண்டு வாழ்தல்.
- வீட்டிலும் சமூகத்திலும் பின்பற்றப்படும் பண்பாட்டு நிகழ்வுகளைப் போற்றிப் பின்பற்றுதல்.
- காணொளி, விளக்கப்பட அட்டைகள்
- கோயில்களில் உள்ள வேண்டுதல்கள் சிலவற்றைக் கூறு
- எட்டுத்தொகை நூல்கள் யாவை
- எட்டுத்தொகை நூல்களில் அக நூல்களைக் கூறு
கற்பித்தல் செயல்பாடுகள்
- காவடி எடுத்தல் தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது. காவடி தூக்கிச் செல்வோர், அதைச் சுமையாக உணராமல் இருக்கப் பாடியவாறே செல்வதற்குப் புலவர்கள் வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ளனர்.இதை பாடல் வழி விளக்குதல்
- அன்பும் அறனும் விளையும் திருமண வாழ்வைத் தலைவி விரும்புகிறாள். இரு மனம் இணையும் திருமணத்தை உறுதிசெய்ய இரு வீட்டாரும் முனைகின்றனர். இதனை, அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் குறுந்தொகைப் பாடல் ஒன்று காட்சிப்படுத்துவதைப் பாடல் வழி விளக்குதல்.
- செய்யுளைச் சீர்ப்பிரித்து வாசித்தல் .கோயில்களில் நடைபெறும் வேண்டுதல்கள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுதல்
- வழிநடை பாடலின் மேன்மையை அறிந்து நம் முன்னோர்கள் பின்பற்றினர் என்பதை அறிந்து பின்பற்ற கொள்வர்
- நம் முன்னோர்களின் அகப்புற வாழ்வைப் பற்றி அறிந்து வாழ கற்றுக் கொள்வர்
- பாடப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் முக்கிய சொற்களுக்கு விளக்கம் கூறுதல்
- படப்பகுதியில் சில வினாக்கள் கேட்டு சிறப்பாக விடை அளிக்கும் மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தல்
மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
- காவடிச்சிந்துக்குத் தந்தை யார்?
- குறுந்தொகை…… நூல்
- காவடிச்சிந்து என்பது யாது?
- வெள்ளிவீதியார் சங்கத்தொகை நூல்களில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?
- சங்க காலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வுடன் இக்கால சமூக நிகழ்வுகளைப் பொருத்தி ஒப்பிட்டு எழுதுக
- மாணவர்கள் புரிந்து கொள்ளாத சில பகுதிகளை மீண்டும் ஒரு முறை கற்பித்தல்.
- எந்தெந்த நாடுகளில் காவடியாட்டம் இன்றளவும் நிகழ்த்தப்படுகிறது அதற்கான காரணங்களை திரட்டுக.
- திருமணங்களில் மணக்கொடை கேட்பது குற்றமா விவாதிக்க.
புதன், 29 ஜூலை, 2026
தமிழர் குடும்ப முறை வகுப்பு :12
நாள் : 3-.08.26 முதல் 07.08.26.
வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பாடம் : தமிழ்
பாடவேளை :4
தலைப்பு : சுற்றத்தார் கண்ணே உள
உரைநடை : தமிழர் குடும்ப முறை
கற்றல் நோக்கம்
- தமிழர் குடும்ப உறவும் முறைகளையும் அவற்றின் பெருமைகளையும் கட்டுரை வழியாக அறிந்து பின்பற்றும் பண்பினைப் பெறுதல்
துணைக்கருவிகள்
- விரைவு குறியீட்டு காட்சிகள். விளக்க பட அட்டைகள்,
ஆர்வமூட்டல் :
- உறவுப் பெயர்கள் சிலவற்றை கூறு
- தாய் தந்தை மகன் என்று இருக்கும் அமைப்பு எது?
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:
கற்பித்தல் செயல்பாடுகள்.
- குடும்பம் என்ற அமைப்பு ஏற்பட நெடுங்காலம் ஆகியிருக்கலாம். இந்த உயர்ந்த அமைப்பின் மூலமே உலகச்சமூகம் இயங்குகிறது. சங்க காலத்தில் குடும்ப அமைப்பு மேலோங்கிய ஒன்றாக இருந்தது. அதன் தொடர்ச்சி இன்றுவரை இருக்கிறது. தொன்மைக் காலத்திலேயே மேம்பட்ட குடும்ப அமைப்பை உருவாக்கியிருந்த தமிழ்ப் பண்பாட்டின் செழுமை, சங்க இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுகிறது.
- குடும்பம், வாழிடம், மணந்தகம் தாய் வழி குடும்பம் தந்தை வழி குடும்பம் விரிந்த குடும்பம் தனி குடும்பம் ஆகியவற்றை பாடப்பகுதி வழி நின்று விளக்குதல்.
கற்றல் செயல்பாடுகள்
- பாடப்பகுதியை வாசித்தல்.
- குடும்ப அமைப்பு முறை பற்றியும் குடும்பத்தில் உள்ள நிகழ்வுகள் பற்றியும் கலந்துரையாடுதல்.
கற்றல் விளைவுகள்:
- குடும்ப அமைப்பின் மேன்மையை உணர்ந்து அதன்படி வாழ முற்படுவர்.
- குடும்ப உறவுகளின் மேன்மையை அறிந்து பெண்ணிற்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்வர்
வலுவூட்டல்:
- பாடப்பகுதியில் வினாக்கள் கேட்டு சிறப்பாக விடையளிக்கும் மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டுதல்.
மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
- குடும்பம் என்ற சொல் முதன் முதலில் பயின்று வரும் நூல் எது?
- சிலம்பு கழி நோன்பு பற்றி கூறும் நூல் எது?
நடுத்தர சிந்தனை வினா
- புக்கில், தன்மனை விளக்குக
- மணந்தகம் என்றால் என்ன?
உயர் சிந்தனை:
- பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியை இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் எழுதுக
குறைதீர்க்கற்றல் :
- மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்.
தொடர் பணி :
- கூட்டுக்குடும்பம் தனிக் குடும்பம் குறித்த உங்களது கருத்துகளை தொகுத்து எழுதுக
மலை இடப்பெயர்கள் வகுப்பு 11
வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு
பாடம் : தமிழ்
பாடவேளை :4
தலைப்பு : இயல் 3
உரைநடை : மலை இடப் பெயர்கள் ஓர் ஆய்வு
கற்றல் நோக்கம்
- தமிழர்களின் வாழ்விடச் சிறப்புகளைக் கள ஆய்வுகளின் வழி அறிந்து பெருமிதம் கொள்ளுதல்
- காணொளி, விளக்கப்பட அட்டைகள்
- ஐவகை நிலங்கள் எவை?
- குறிஞ்சி நிலம் குறிக்கும் நிலப்பகுதி எது?
- இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:
- மலை, மனித சமூகத்தின் முதல் வாழ்நிலமாகும். தமிழ் அக இலக்கணம், மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி என்று குறிக்கிறது. குறிஞ்சி நிலம் சார்ந்த சங்கப் பாடல்கள் மலையோடு தொடர்புடைய தமிழர்தம் ன் சீரிய வாழ்வினைப் பேசுகின்றன. மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை மலையாய்வியல் (OROLOGY) என்ற கலைச்சொல்லால் அழைப்பர். தமிழர் வாழ்வில் மலைகள் பெறும் சிறப்பு குறிப்பிடத்தக்கது.
- திராவிடர்கள் மலை நில மனிதர்கள் என்று அழைத்தவர் கமில் சுவலபில் கூற்று, திராவிடர்களின் மலைப் பெருமிதம், மலைக் குடியிருப்புகள், வடமேற்குப் பகுதிகளில் திராவிட மலைப் பெயர் கள், தென்னிந்தியாவில் மலை என்ற இட பெயரின் சிறப்பிடம் ஆகியவற்றை பாடப்பகுதி வழி நின்று விளக்குதல்
- பாடப்பகுதியை வாசித்தல்
- பாடப்பகுதியில் இடம்பெறக்கூடிய மலை இட பெயர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் குறித்து கலந்துரையாடுதல்
- மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தன்மையை அறிந்து இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொள்வர்
- தமிழர்களின் வாழ்விடச் சிறப்புகளை அறிந்து வாழ்விடங்களை நேசிக்க கற்றுக் கொள்வர்.
- பாடப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் முக்கிய சொற்களுக்கு விளக்கம் கூறுதல்
- படப்பகுதியில் சில வினாக்கள் கேட்டு சிறப்பாக விடை அளிக்கும் மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தல்
"எளிய சிந்தனை வினா..
- ‘விண் பொரு நெடுவரை குறிஞ்சி கிழவ’ என்ற தொடர் இடம்பெறும் நூல்?
- நீலகிரியில் வாழும் பழங்குடி மக்கள்…….
- கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்படுகிறது?
- கொற்கை வஞ்சி தொண்டி வளாகம் குறித்து எழுதுக.
- திராவிட பழங்குடிகளின் இனக்குழு பெயர்களுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பிற்கு எடுத்துக்காட்டு தருக
- மாணவர்கள் புரிந்து கொள்ளாத சில பகுதிகளை மீண்டும் ஒரு முறை கற்பித்தல்.
தொடர் பணி :
மலை குறித்த வேறு சொற்களையும் அவை சார்ந்த தலை சொற்களையும் திரட்டி பட்டியல் உருவாக்குகபுதன், 22 ஜூலை, 2026
வகுப்பு 11 புணர்ச்சிவிதி
நாள் : 27-.07.26 முதல் 01.08.26.
வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு
பாடம் : தமிழ்
பாடவேளை :4
தலைப்பு: இயல் 2 இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல்
இலக்கணம் :புணர்ச்சி விதிகள்
கற்றல் நோக்கம்
- மொழியை தவறின்றி கையாளுதல், பாடல்களைப் பொருள் உணர்ந்து பிரித்தறிதல் ஆகிய படிநிலைகளை அறிதல்
துணைக்கருவிகள்
- பயிற்சி வினாத்தாள்
ஆர்வமூட்டல் :
- நிலைமொழி வருமொழி என்றால் என்ன?
- செம்மொழி இச்சொல்லை பிரிக்கும் முறை எதையாது இதில் இருக்கக்கூடிய முதல் எழுத்து ஈற்றெழுத்து யாது?
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:
கற்பித்தல் செயல்பாடுகள்.
- சொற்புணர்ச்சியின்போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களைச் சுருங்கச் சொல்லும் வரையறைகளைப் புணர்ச்சி விதிகள் என்பர். மொழியைப் பிழையின்றிக் கையாளவும் பாடலடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்தறியவும் மொழி ஆளுமையைப் புரிந்துகொள்ளவும் இப்புணர்ச்சி விதிகள் பயன்படுகின்றன.
- உடன்படு மெய்ப் புணர்ச்சி, குற்றியலுகரப் புணர்ச்சி, முற்றியலுகரப் புணர்ச்சி, இயல்பீறு விதி ஈறு புணர்ச்சி, பூப்பெயர்ப் புணர்ச்சி, மெய்யீற்றுப் புணர்ச்சி, தனிக்குறில் முன் ஒற்று புணர்ச்சி, பண்புப் பெயர் புணர்ச்சி மகர ஈற்றுப் புணர்ச்சி ஆகியவற்றைப் பாடம் வழி விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள்
- சொற்களைப் பிரிக்கும் முறையை அறிந்து கொள்வர்
- பாடப்பகுதியில் இடம் பெற்று இருக்கும் புணர்ச்சி விதி குரிய சொற்களை எடுத்து அதை எவ்வகை புணர்ச்சி என்பதை வகுப்பறையில் விவாதித்தல்
கற்றல் விளைவுகள்:
- சொற்கள் பிரியும் முறையை அறிந்து கொள்வர்
- சொற்களைப் பிரிக்கும் போது ஏற்படும் மாற்றத்தை வைத்து அதில் எந்த வகையான விதிகள் வரவேண்டும் என்று அறிந்து பயன்படுத்தக் கற்றுக் கொள்வர்
வலுவூட்டல்:
- சில சொற்களைக் எழுதி அதற்கு சரியான முறையில் புணர்ச்சி விதி கூறும் மாணவர்களைப் பாராட்டிப் பரிசளித்தல்
மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
- புணர்ச்சி என்றால் என்ன?
- அருவினை புணர்ச்சி விதி தருக
நடுத்தர சிந்தனை வினா
- குற்றியலுகரப் புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக
- புலனறிவு, வெற்றிலை, திரைப்படம் புணர்ச்சி விதி தந்து விளக்குக
1. உயர் சிந்தனை வினா
- விதி வேறுபாடறிந்து விளக்குக
- தன்னொற்றிரட்டல் தனி குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்
குறைதீர்க்கற்றல் :
- சில சொற்களை கொடுத்து புணர்ச்சி விதி கூறச்சொல்லி தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை கற்பித்தல்
தொடர் பணி :
- பாடப்பகுதியில் இடம் பெற்று இருக்கும் சில சொற்களை எழுதி அதற்கான புணர்ச்சி விதிகளையும் எழுதி வருக
யா.ஃப்ரீடா, M.A, MA, M.A, M.Ed, M..Phil ,முதுகலை தமிழாசிரியை,அரசு மேல்நிலைப்பள்ளி அயன் குறும்பலாப்பேரி தென்காசி
திருக்குறள் வகுப்பு 12
நாள் : 27-.07.26முதல் 1.08.26 வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடம் : தமிழ் பாடவேளை :4 தலைப்பு: பெய்யெனப் பெய்யும் மழை அற இலக்கியம் :திருக்குறள் கற்றல் நோக்கம்
துணைக்கருவிகள்
ஆர்வமூட்டல் :
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்: கற்பித்தல் செயல்பாடுகள்.
திருக்குறள்
திருக்குறளுக்கு பதின்மர் உரை உள்ளது. திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் திருவள்ளுவமாலை, வாழ்வியலுக்கு தேவையான அத்தனை கருத்துகளையும் கூறும் அற்புதச் சுரங்கம் திருக்குறள் பாடப்பகுதியில் இடம் பெற்று இருக்கும் இல்வாழ்க்கை, செய்ந்நன்றி அறிதல், வெஃகாமை, புலால் மறுத்தல், வெகுளாமை, ஊழ் ஆகிய அதிகாரங்களில் கூறப்படும் குறள்களின் கருத்துகளை விளக்குதல் கற்றல் செயல்பாடுகள்
கற்றல் விளைவுகள்:
வலுவூட்டல்:
மதிப்பீடு: "எளிய சிந்தனை வினா..
நடுத்தர சிந்தனை வினா
உயர் சிந்தனை:
குறைதீர்க்கற்றல் :
தொடர் பணி :
|