தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 11 ம் வகுப்பு ஜூன் இரண்டாம் வாரம்
நாள் : 9.06.25 முதல் 13.06.25 வரை
பாடம்: தமிழ்
வகுப்பு: மேல்நிலை முதலாம் ஆண்டு
தலைப்பு: இயல் 1 (உயிரினும் ஓம்பப்படும்)
உரைநடை: பேச்சு மொழியும் கவிதை மொழியும்
கற்றல் நோக்கங்கள்:
பேச்சு மொழி கவிதை மொழி ஆகியவற்றின் தனித்தன்மைகளை படைப்புகள் பற்றிய கருத்துகளின் வழி புரிந்து கொள்ளுதல்.
துணைக் கருவிகள் :
படங்கள் விளக்க அட்டைகள், கவிஞர் கவிதைகள்.
ஆர்வமூட்டல் :
கலைகள் சிலவற்றை கூறு
உனக்கு தெரிந்த சில கவிஞர்கள் பெயர்களை கூறு.
கற்பித்தல் செயல்பாடுகள்:
பேச்சு மொழியும், கவிதைமொழியும்:
கலைகளின் உச்சம் கவிதை என்பர். எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சு மொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எழுத்து மொழியில் பேச்சைக் கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது என்பது யதார்த்தம்.
வாளினும் வலிமை, நேரடி மொழி பெருங்கவிஞர்களின் வாய் மொழி போன்ற தலைப்புகளை இப்பாடத்தின் வழிவிளக்குதல்.
வலுவூட்டல்:
படப்பகுதியில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் கவிஞர் கவிதைகளையும் கூறி வலுவூட்டல்.
புரியாத பகுதிகளை மேலும் விளக்குதல் எளியவினாக்கள் கேட்டு கற்றலை உறுதிப்படுத்தல்.
கற்றல் செயல்பாடுகள்:
மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கவிஞர்கள் மற்றும் கவிதைகளை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடல்.
கற்றல் விளைவுகள்:
பேச்சு மொழி கவிதை மொழி இரண்டிற்கும்மான வேறுபாடுகளை அறிந்து கொள்கின்றனர்.
பெருங்கவிஞர்களின் கவிதை நடையை அறிந்து கொள்கின்றனர்
வலுவூட்டல்:
பாடப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெருங்கவிஞர்களின் கவிதைகளையும் அவர்களுடைய வாழ்வியல் நிகழ்வுகளையும் எடுத்துக் கூறி விளக்குதல்.
மதிப்பீடு:
எளிய சிந்தனை வினா
1. பேச்சு மொழியும் கவிதை மொழியும் என்ற கட்டுரையை எழுதியவர்…….
2. கலைகளின் உச்சம்…..
நடுத்தர சிந்தனை வினா
1. பேச்சு மொழி எழுத்து மொழியை காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தி மிக்கது ஏன்?
2. நேரடி மொழி என்றால் என்ன?
உயர் சிந்தனை வினா
1. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் உள்ள வேறுபாடு பற்றி சில கருத்துக்களை தொகுக்க
தொடர் பணி
சில புதுக்கவிதை, மரபுக் கவிதைகளைத் தொகுக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக