தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 12 ம் வகுப்பு ஜூன் இரண்டாம் வாரம்
நாள் : 9.06.25 முதல் 13.06.25 வரை
பாடம்: தமிழ்
வகுப்பு: மேல்நிலை இரண்டாம் ஆண்டு
தலைப்பு: இயல் 1 (உயிரினும் ஓம்பப்படும்)
உரைநடை: நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர்
கற்றல் நோக்கங்கள்:
தமிழாய்வின் முன்னோடியாகக் இருந்த ஆளுமைகளின் பன்முகத்தன்மையை அறிந்து ஆய்வுச் சிந்தனையை வளர்த்து கொள்ளுதல்
வெவ்வேறு காலகட்டங்களில் மொழியின் சிறப்பு கூறப்பட்டுள்ள செய்யுள் பாடல் கருத்துக்களை தெரிந்து கொண்டு பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துதல்.
துணைக் கருவிகள்
படங்கள், விளக்க அட்டைகள், மடிக்கணினி, வலையொளி பதிவுகள்.
ஆர்வமூட்டல் :
தமிழ்ச் சான்றோர் சிலரைக் கூறு
பண்டைய காலத்தை நாம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?
இது போன்ற வினாக்கள் மூலம் மாணவர்களை ஆர்வமுறச் செய்தல்.
கற்பித்தல் செயல்பாடுகள்:
மயிலை சீனி வேங்கசாமி. மயிலாப்பூரில் 16-12-1900 ஆம் ஆண்டு பிறந்தார்.
25 ஆண்டுகள் ஆசிரியராகவும் இதழாசிரியராகவும் செயல்பட்டார். ஆயிவுப்பணி சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு கலை வரலாறு, மொழி ஆய்வு, கல்வெட்டு ஆய்வு.
விருதுகள் தமிழ்ப் பேரவைச் செம்மல் ஆராய்ச்சி பேரறிஞர்.
அறிந்த மொழி - வட்டெழுத்து, கோலெழுத்து தமிழ் பிராம்மி எழுத்துகளை ஆயிந்தவர். கிறித்தவரும் தமிழும், சமணமும் தமிகும்) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்,
19ம் நூற்றாண்டுத் தமிழ், மறைந்து போன தமிழ் நூல்கள் போன்ற பல நூல்களைப் படைத்து ஆய்வுலகில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை தந்த மயிலை சீனி வெங்கடசாமி அவர்களின் ஆய்வுகளை குறித்து பாடத்தின் மூலம் விரிவாக விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள்
பாடப்பகுதியை ஏற்ற இறக்கத்துடன் வாசிப்போம்
ஆய்வுகள் குறித்த செய்திகளை வகுப்பறையில் கலந்துரையாடல் செய்தல்
கற்றல் விளைவுகள்:
தமிழுக்கு பங்காற்றிய ஆளுமைகளின் வரலாற்றினை அறிந்து அவர்களை பின்பற்றுதல்
தமிழில் கலைஞர் மற்றும் வரலாற்றின் நிகழ்வுகளை அறிந்து போற்றுதல்
வலுவூட்டல்:
கடினச் சொற்களுக்குப் பொருள் கூறுதல்
மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ஆய்வுகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் ஆய்வுகள் சிலவற்றை கூறி வலுவூட்டல்
மதிப்பீடு:
எளிய சிந்தனை வினா
1.மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் சொல்லாய்வு கட்டுரைகள் எந்த தலைப்பில் வெளிவந்தது?
2. களப்பிறர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலை எழுதிய ஆசிரியர்…..
நடுத்தர சிந்தனை வினா
1. மயிலை சீனி வேங்கட சாமி பெற்ற முதல் விருதுகளைப் பற்றி கூறு
2. மயிலை சீனி வேங்கட சாமி அவர்களின் படைப்புகள் சிலவற்றைக் கூறு
உயர் சிந்தனை வினா
1. தெரிந்த ஆய்வாளர் ஒருவருடைய ஆய்வு பணிகளைத் தொகுக்க.
தொடர் பணி
தமிழ் அறிஞர்களின் பணிகள் குறித்து வகுப்பறையில் படத்தொகுப்பு உருவாக்கி கலந்துரையாடுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக