புதன், 8 ஜூலை, 2026

மனோன்மணீயம் வகுப்பு 11

 

நாள்                  : 13-.07.26 முதல் 17.07.26

வகுப்பு             : மேல்நிலை முதலாம் ஆண்டு 


பாடம்                 : தமிழ்

 பாடவேளை        :4

தலைப்பு: இயல் 2 இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல்

 செய்யுள்:        மனோன்மணீயம்


கற்றல் நோக்கம்

  •  இயற்கை மனிதனுக்கு உணர்த்துவதையும் உதவுவதையும் இலக்கியம் வழி அறிந்து மதிப்பளித்தல் 


 துணைக்கருவிகள்


  • விரைவு குறியீட்டு காட்சிகள். விளக்க பட அட்டைகள்,

ஆர்வமூட்டல் : 

  •  நம்மைச் சுற்றி காணும் பொருட்கள் சிலவற்றை கூறு 

  •  திருநெல்வேலியில் உள்ள பல்கலைக்கழகம் எது?

  •  நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்து யார் எழுதியது?

  • இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:


கற்பித்தல் செயல்பாடுகள்.


மனோன்மணீயம்:


  • பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் விட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய இரகசிய வழி என்ற நூலைத் தழுவி எழுதிய முதல் பா வடிவ நாடகம் மனோன்மணியம் இதில் 5 அங்கமும் 20 களமும் உள்ளது.

  • கிளைகதையாக சிவகாமிசரிதம் உள்ளது.

  • நடராசன் தன் பணியின் இடையே

  • வேலையில் ஒய்வு நேரத்தில் அங்கிருந்த புல், நாங்கூழ்புழு இவற்றின் பணி மற்றும் அழகு குறித்து கூறும் நடராசனின் தனிமொழியைப் பாடம் வழி விளக்குதல்

கற்றல் செயல்பாடுகள்

  •  பாடல் பகுதியை வாசிக்க செய்தல் 

  •  செய்யுள் பகுதியில் இடம்பெறும் புணர்ச்சி விதி உறுப்பிலக்கணம் ஆகியவற்றை எழுதுதல்

  •  புல் மற்றும் நாங்குழ் புழுவின் செயல்களைப் பற்றி வகுப்பில் உரையாடுதல் 


கற்றல் விளைவுகள்:

  •  இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக் கொள்வர்.

  •  அனைத்து உயிர்களையும் அதனுடைய உழைப்பைப் பார்த்து மதிக்க கற்றுக் கொள்வர் 

வலுவூட்டல்:

  •  செய்யுளின் கருத்துகளைத் தொகுத்து கூறுதல் 

  •  புல்லின் செயல்கள் நாங்கழ் புழுவின் பணிகள் ஆகியவற்றை வினாவாக கேட்டு பதில் அளிக்கும் மாணவர்களைப் பரிசளித்து பாராட்டுதல் 

 குறைதீர்க்கற்றல் :

  •  மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்.

மதிப்பீடு:


"எளிய சிந்தனை வினா..

  •  மனோன்மணியம் ஆசிரியர் யார்?

  •  மனோன்மணியம் செய்யுள் பகுதியை தனி மொழி பேசுபவர் யார்?


நடுத்தர சிந்தனை வினா

  •  புல்லின் செயல்களாக நடராஜர் கூறுவது யாது?


1. உயர் சிந்தனை வினா:

  •  நடராசனின் தனிமொழியிலிருந்து நீங்கள் அறியும் கருத்துக்களை கூறு 

குறைதீர்க்கற்றல் :

மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்

தொடர் பணி :


  •  நாங்கூழ் புழு நடராசனிடம் உரையாடல் நடத்தியிருந்தால் எப்படி இருக்கும் கற்பனையாக ஒரு உரையாடலை எழுதுக 



யா.ஃப்ரீடா, M.A, MA, M.A, M.Ed, M..Phil ,முதுகலை தமிழாசிரியை,அரசு மேல்நிலைப்பள்ளி அயன் குறும்பலாப்பேரி தென்காசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக