புதன், 22 ஜூலை, 2026

திருக்குறள் வகுப்பு 12

 

நாள்                  : 27-.07.26முதல் 1.08.26

வகுப்பு             : மேல்நிலை இரண்டாம் ஆண்டு


பாடம்                 : தமிழ்

 பாடவேளை     :4

தலைப்பு: பெய்யெனப் பெய்யும் மழை 

 அற இலக்கியம் :திருக்குறள் 


கற்றல் நோக்கம்

  •   அற இலக்கியங்களில் உட்பொருளை அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் திறன் பெறுதல் 

துணைக்கருவிகள்


  • விரைவு குறியீட்டு காட்சிகள். விளக்க பட அட்டைகள்,

ஆர்வமூட்டல் : 

  •   உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் எது?

இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:


கற்பித்தல் செயல்பாடுகள்.

 

 திருக்குறள்

  •  அற இலக்கியம் ஆகிய திருக்குறள் குறள் வெண்பாவில் அமைந்தது.

திருக்குறளுக்கு பதின்மர் உரை உள்ளது.

திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் திருவள்ளுவமாலை,

 வாழ்வியலுக்கு தேவையான அத்தனை கருத்துகளையும் கூறும் அற்புதச் சுரங்கம் திருக்குறள் 

 பாடப்பகுதியில் இடம் பெற்று இருக்கும் இல்வாழ்க்கை, செய்ந்நன்றி அறிதல், வெஃகாமை, புலால் மறுத்தல், வெகுளாமை, ஊழ் ஆகிய அதிகாரங்களில் கூறப்படும் குறள்களின் கருத்துகளை விளக்குதல் 


கற்றல் செயல்பாடுகள்

  •   திருக்குறளைச் சீர் பிரித்து வாசித்தல் 

  •  திருக்குறளில் பயின்று வரும் அணிகளை அறிதல் 


கற்றல் விளைவுகள்:

  •   அற இலக்கியமாகிய திருக்குறள் கூறும் கருத்துகளை வாழ்வில் பின்பற்றி மேன்மை அடைய கற்றுக் கொள்வர்

வலுவூட்டல்:

  •   திருக்குறளின் கருத்துக்களை மீண்டும் கூறி ஒவ்வொரு அதிகாரத்திலும் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை மாணவர்களிடம் கேட்டு பதில் அளிக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்


மதிப்பீடு:


"எளிய சிந்தனை வினா..

  •  திருவள்ளுவர் சிலைக்கு தற்போது என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது?

  •  திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள…


நடுத்தர சிந்தனை வினா

  •  செல்லிடத்து புணர்ச்சி விதியை தருக 

  •  ஞாலத்தின் பெரியது எது 


உயர் சிந்தனை:

  •  நிரல்நிறை அணியை  விளக்குக.

  •  சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக 

குறைதீர்க்கற்றல் :

  • மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல்

தொடர் பணி :


  •  திருக்குறள் அற்புத சுரங்கம் எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வரைக 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக