வெள்ளி, 10 அக்டோபர், 2025
வியாழன், 9 அக்டோபர், 2025
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு:12
நாள் : 13 .10.25 முதல் 17.10.25.
வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பாடம் :தமிழ்
தலைப்பு : இயல். 4 கவிதை, காவியம், சிலப்பதிகாரம்
பாட வேளை : 4
கற்றல் நோக்கம்
- தமிழர்க்கே உரிய கலை, அழகியல் கூறுகளைக் காப்பியம் வாயிலாகப் படித்துப் பெருமிதம் கொள்ளுதல்; பின்பற்றுதல்
- புதிய கவிதை வடிவங்களைப் படித்துச் சுவைத்தல் மற்றும் பயன்படுத்துதல்.
துணைக்கருவிகள்.
- விளக்க அட்டைகள், இணைய வளங்கள்
ஆர்வமூட்டல் *
- ஐம்பெருங்காப்பியங்கள் எவை ?
- உனக்கு பிடித்த கவிதைகள் சிலவற்றை கூறு.
இது போன்ற வினாக்கள் கேட்டு விளக்குதல்
கற்பித்தல் செயல்பாடுகள்.
சிலப்பதிகாரம்
- ஆடல், பாடல், அழகு என்னும் மூன்றில் ஒன்றும் குறைபடாமல் ஏழு ஆண்டுகள்வரை ஆடல் கலையைப் பயின்றவர் மாதவி. நாட்டிய அரங்கின், அமைப்பு தலைக்கோல் அமைதி, மாதவி மன்னனிடம் சிறப்பு பெறுதல், பற்றி விளக்குதல்
நகுலன் கவிதைகள்
- பாரதிக்குப் பின்னர் வந்த காலகட்டத்துக் கவிதைகள், பலவற்றையும் பற்றிய சிந்தனைகளைச் செறிவாக, குறிப்பாக, முரணாக, அழகிய தொடராகத் தருவதற்கு முயன்றன. புதுக்கவிதை வடிவம் இதற்கு ஏற்றதாக இருந்தது; இருக்கிறது. புதுக்கவிதை, புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டும் கொண்டதன்று. புதிய சிந்தனைகளையும் புதிய கருத்துகளையும் புதுமையாகச் சொல்வதையும் குறிப்பது.
காவியம்
- இறகுகளின் தொகுதியைச் 'சிறகு' என்பர். சிறகிலிருந்து பிரிந்த இறகு, நிலத்துக்கும் வானுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழும் காற்றின் தீராத தழுவல்களால் மண்ணில் வீழாது தன் வாழ்வை எழுதுகிறது. வாழ்வு என்பது காவியத்துக்கான பொதுவான பாடுபொருள்.
கற்றல் செயல்பாடுகள்:
- பள்ளி அல்லது விழாக்களில் அமைக்கப்படும் மேடைகளைக் குறித்து விவாதித்தல்
- கவிதைகளை ஏற்ற இறக்கத்துடன் வாசித்தல்
வலுவூட்டல்
- சிலப்பதிகாரப் பகுதியில் நாட்டிய அரங்க அமைப்பு குறித்து விளக்கி சில வினாக்கள் கேட்டல்
- சில சொற்களை எழுதி அதை சரியாக பிரித்து உறுப்பிலக்கணம் கூறும் மாணவர்களைப் பாராட்டி பரிசளித்தல்
கற்றல் விளைவுகள்
- நாட்டிய அரங்க அமைப்பை அறிந்து கொள்வர்
- புதுக்கவிதையின் எளிமையையும் புதுமையையும் பற்றி அறிந்து கொள்வர்.
மதிப்பீடு
எ சி வி
- குடிமக்கள் காப்பியம் எது?
- நகுலனின் இயற்பெயர் என்ன?
- காவியம் எழுதியவர் யார்?
ந.சி.வி
- சிலப்பதிகாரம் குறிப்பு வரைக
- நகுலன் கதை கவிதை பற்றி கூறு
- பிரமிள் படைப்புகள் சிலவற்றை கூறு.
உசி.வி.
- * சிலம்பு கூறும் அரங்க, அமைப்பை விளக்குக .
- நகுலனின் கவிதையில் இடம்பெறும் நயங்களைக் கூறுக.
- காற்றின் தீராத பக்கங்களில் எதனை, எது எழுதிச் சென்றது?
தொடர்பணி:
- பிரமிளின் கவிதைத் தொகுப்பிலிருந்து உங்களுக்குப் பிடித்த கவிதையை வகுப்பறையில் காட்சிப்படுத்துக.
- பறவை பற்றி எழுதப்பட்ட கவிதைகள் சிலவற்றைத் தொகுத்துக் குறும்புத்தகம் உருவாக்குக.
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு:11
நாள் : 13 .10.25 முதல் 17.10.25.
வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு
பாடம் : தமிழ்
தலைப்பு : இயல். 4 பிள்ளைக்கூடம், தொலைந்து போனவர்கள்
பாட வேளை : 4
கற்றல் நோக்கம்
- செய்யுள்களின்வழி வெளிப்படும் கல்விமுறைகளையும் விழுமியங்களையும் போற்றிப் பின்பற்றுதல்.
துணைக்கருவிகள்.
- விளக்க அட்டைகள், இணைய வளங்கள்
https://allaloy.blogspot.com/
ஆர்வமூட்டல் *
- கல்வி கற்கும் இடம் எது?
- நாம் வாழ்வில் நடைபெறும் நிகழ்வு அனைத்திலும் மனத் தெளிவுடன் நடந்து கொள்கிறோமா?
- இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுற செய்தல்.
கற்பித்தல் செயல்பாடுகள். https://allaloy.blogspot.com/
பிள்ளைக்கூடம்
- இளமையின் சிறகை முறிக்காத இனிய ழலில், பிள்ளைகளுக்குப்
பிடித்த பள்ளிக்கூடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றொரு கனவு
அனைவருக்கும் இருக்கும். அந்தக் கனவை ஓர் ஓவியர் வரைந்து
காட்டலாம்; ஒரு பாடகர் பாடிக் காட்டலாம்; இங்கொரு கவிஞர் எழுதிக்
காட்டுகிறார்.
தொலைந்து போனவர்கள்
- மானுட சமுதாயத்தின் விழிகள் ஒளியிழந்து கிடப்பதைத் தம் கவிதையில் உணர்த்துகிறார் கவிஞர்; அவ்விழிகளுக்கு ஒளியூட்ட விரும்புகிறார்.
- நடக்காததை நடந்ததாகக் கருதிக்கொண்டு மாயையில் வாழும் மக்களுக்கு உண்மையைக் காட்டும் தத்துவமாக இக்கவிதை அமைந்துள்ளதை விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள்:
- பள்ளி செயல்பாடுகள் சிலவற்றை விவாதித்தல்.
- கவிதைகளை ஏற்ற இறக்கத்துடன் வாசித்தல்
வலுவூட்டல் https://allaloy.blogspot.com/
- கவிதை பகுதியைத் தெளிவாக விளக்கி சில வினாக்கள் கேட்டு சிறப்பாக விடையளிக்கும் மாணவர்களைப் பாராட்டுதல்.
கற்றல் விளைவுகள் https://allaloy.blogspot.com/
- பள்ளியின் சிறப்பு அறிந்து பின்பற்ற கற்று கொள்வர்.
- புதுக்கவிதையின் எளிமையையும் புதுமையையும் பற்றி அறிந்து கொள்வர்.
மதிப்பீடு
எ சி வி
- பிள்ளைக்கூடம் எந்த கவிதை தொகுப்பு…….
- உரைத்தாய் இலக்கணக்குறிப்பு
ந.சி.வி
- இரா. மீனாட்சி கவிதை பற்றி கூறு
- அப்துல் ரகுமான் படைப்புகள் சிலவற்றைக் கூறு.
உசி.வி. https://allaloy.blogspot.com/
- இரா. மீனாட்சி கவிதையில் இடம்பெறும் நயங்களைக் கூறுக.
- அப்துல் ரகுமானின் கவிதையிலிருந்து வினா-விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளைத் தருக.
தொடர்பணி:
- தாய்மொழிவழிக் கல்வி பற்றிய உங்கள் எண்ணங்களைக் கவிதையாக்குக.
https://allaloy.blogspot.com/ - தமிழ்க் கவிதைகளுக்ககான சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர்களின் பட்டியலைத் திரட்டி,நூலின் பெயர், ஆண்டு போன்ற விவரங்களோடு அட்டவணை உருவாக்குக.
திங்கள், 6 அக்டோபர், 2025
புதன், 1 அக்டோபர், 2025
ஞாயிறு, 28 செப்டம்பர், 2025
தமிழ் மொழி இலக்கியத் திறனறிவு தேர்வு
திங்கள், 22 செப்டம்பர், 2025
ஞாயிறு, 21 செப்டம்பர், 2025
வெள்ளி, 19 செப்டம்பர், 2025
அக்டோபர் 2 வது வாரம்தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு. 11
நாள் : 06.10.25 முதல் 10-10.25
வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டுhttps://allaloy.blogspot.com/
பாடம் : தமிழ்
பாடவேளை :4
தலைப்பு :தமிழ் நாட்டுக் கல்வி வரலாறுhttps://allaloy.blogspot.com/
கற்றல் நோக்கங்கள் :
- காலந் தோறும் கல்வியின் வளர்நிலை வரலாற்றை அறிந்து கற்பதோடு, கல்லாத மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுதல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- விளக்க அட்டைகள்,
- வலையொளி புதிவுகள்.
ஆர்வமூட்டல்:
- கல்வி கற்கும் இடம் எது?
- கல்விமுறை அன்றும் இன்றும் எவ்வாறு இருந்தது?
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்
கற்பித்தல் செயல் பாடுகள்:
- கல்வியின் நோக்கம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதாகும்.
- காலந்தோறும் கற்றலும், கற்பித்தலும் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வளர்ந்துள்ளன.
- தமிழ் இலக்கியங்களில் இலக்கண நூல்களில், கல்வி சமண பௌத்தப்.. பள்ளிகள், மரபுவழி குருகுலக் கல்விமுறை,திண்ணைப் பள்ளிக் கல்விமுறை, உயர்நிலைக் கல்விமுறை, தமிழ்நாட்டில் ஐரோபபியர் களின் கல்விப்பணி ஆகியவற்றை விளக்குதல்
கற்றல் செயல் பாடுகள்:
- பாடப்பகுதியைப் பிழையில்லாமல் வாசித்தல்
- பண்டைய மற்றும் இன்றைய கல்வி முறை பற்றி விவாதித்தல்.
வலுவூட்டல்:
- தனிமனிதனைச் சமுதாயத்துக்கு ஏற்றவனாக மாற்றுதல் என்னும் சீரிய நோக்கமுடையது கல்வி என்பதை விளக்குதல்
- பாடப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்டு சிறப்பாக விடையளிக்கும் மாணவியருக்குப் பாராட்டி பரிசளித்தல்
https://allaloy.blogspot.com/
கற்றல் விளைவுகள்:
- கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வர்.
- கல்வியின் வளர்ச்சி நிலையையும் மேன்மையையும் அறிந்து போற்ற முற்படுவர்.
மதிப்பீடு
எசிவி https://allaloy.blogspot.com/
1.சமணப்பள்ளி நடத்தியவர்…
2.பள்ளி என்ற சொல்லின் பொருள் ……
ந.சி.வி
- இலக்கியங்கள் கூறும் கல்வி பற்றிகூறு
- கல்விகற்பிக்கப்படும் இடம் பற்றி இலக்கியங்கள் கூறுவதை எழுது
உ.சி.வி https://allaloy.blogspot.com/
- அன்றைய இன்றைய கல்விமுறை குறித்து எழுதுக
தொடர்பணி :
- தமிழ்நாட்டின் பண்டைக் கல்வி முறை. குறித்துச் செய்திப்படக் கட்டுரை ஏடு ஒன்று தயாரிக்க .