நாள் 7.09.2026 முதல் 11.09.26
வகுப்பு :மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பாடம் :தமிழ்
தலைப்பு :திருப்புதல் இயல் 2
நிரப்புக
1. வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு?
2.“ நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று ஐயப்ப மாதவன் குறிப்பிடுவது.......
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
1.கலைச்சொல் அ) Museum அல்லது ஆ) HARDWARE
2.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
அ)கலை,களை, கழை ஆ) தலை, தளை, தழை
3)கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக..
அ)விண்மீன், ஒளிர், எரி, விழ) ஆ)குதிரை, வேகம், ஓடு, தாவு
4.உறுப்பிலக்கணம் தருக
அ) கலங்கி
5.புணர்ச்சி விதி தருக
அ) இனநிரை (அல்லது) ஆ) புதுப்பெயல்
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
6.நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது விளக்கம் தருக
7.செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
8. விலங்குகளும் பறவைகளும் எவ்வாறு நடுங்கியதாக நக்கீரர் கூறுகிறார்
9.இந்தோ– சாரசனிக் கட்டடக்கலை குறிப்பு வரைக
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
10.சென்னை அறிவின் நகரம் என்பதை சான்றுடன் விளக்குக.
11.கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
12.வாகைத் திணையைச் சான்றுடன் விளக்குக
13.வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
மனப்பாடம்
14 மாமேயல்….. தொடங்கும் பாடலை எழுது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக