நாள் : 7.09.2026 முதல் 11.09.26
வகுப்பு :மேல்நிலை முதலாம் ஆண்டு
பாடம் :தமிழ்
தலைப்பு :திருப்புதல் இயல் 2
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
1.தமிழாக்கம் தருக
அ) simplicity is nature's first step, and the last of art.
2.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
அ) கலை,களை, கழை (அல்லது) ஆ)குரை, குறை
3)உறுப்பிலக்கணம் தருக
அ)அலர்ந்து
4)புணர்ச்சி விதி
அ)உழுதுழுது
5)கலைச்சொல்
அ) Farmyard manure
ஆ) Harvesting
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
6)எதற்கு முன் நல்ல செயல்களை விரைந்து செய்யவேண்டும் என்று குறள் கூறுகிறது?
7). தமிழ்நாட்டின் மாநில மரம் - சிறுகுறிப்பு வரைக.
8). ஐங்குறுநூறு -குறிப்பு வரைக.
9).ஐந்து வேளாண் மந்திரங்கள் யாவை?
10)சீர் தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும் (மூன்றனுக்கு) 3×3=9
11).குறித்த காலத்திற்கு முன்பாக ஊர் திரும்பிய தலைவன் கூறுவனவற்றை ஐங்குறுநூறு கொண்டு விளக்குக
12)தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. - இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்குக.
13).வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? - நும் கருத்தை எழுதுக.
14) "இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற்கு இடமிலை" இடஞ்சுட்டிப்பொருள் விளக்குக.
மனப்பாடப்பாடல் 2
15).பொருட்டு ……. முடியும் குறளை எழுது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக