வியாழன், 11 ஜூலை, 2024

காமராசர் கவிதை

 காமராசர் கவிதை 

தந்தையை இழந்த நீ 

பலருக்கு தந்தையாய்

கல்வி தந்தாய் 


காமாட்சி என்று உன் அன்னை அழைத்தாலோ என்னவோ 

நீ அனைவரையும் காக்கும் ஆட்சி செய்தாய்...!

ராசா என்ற பெயரால் தானோ நீ பல ராசாக்களை உருவாக்கினாய்...!


வறுமையால் உனக்கு கிடைக்காத கல்வியை எல்லாரும் கற்க வழி செய்தாய் 





கர்மவீரர் காமராசர்

 

  பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் உள்ள விருதுபட்டி என்ற கிராமத்தில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். இவரின் பெற்றோர் குமாரசாமி, சிவகாமி அம்மாள்.

காமராஜரை ராசா என்றே அவரது தாயார் அழைத்தார். அவர்களின் குலதெய்வமான காமாட்சியின் பெயரையே அவருக்கு சூட்டி அழகு பார்த்தார்.

பதின்ம வயதில் காங்கிரஸ் உறுப்பினர்

நாளடைவில் அது காமராசு ஆனது. தொடக்க கல்வி மட்டுமே பயின்றுள்ள காமராஜர், பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்ட போது அவரது மாமாவின் துணிக்கடையில் வேலை பார்த்தார்.

சுதந்திர தாகமும், விடுதலை தீயும் கொளுந்துவிட்டெரிந்த அக்காலக்கட்டத்தில் காமராஜர், பெ. வரதராசுலு நாயுடு போன்றோர்களின் வீரமிக்க சுதந்திர உரைகளால் ஈர்க்கப்பட்டார்.

தொடர்ந்து தன்னை சுதந்திர போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டார். தனது 15ஆவது வயதிலேயே அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினரும் ஆனார்.

உப்பு சத்தியாகிரக போராட்டம்

இந்நிலையில் 1930ஆம் ஆண்டு மார்ச் மாதம் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட காமராஜர், கைது செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த ஓராண்டு சிறைவாசம் காந்தி- இர்வின் ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்தது.

அதன்பின்னர் விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் காமராஜர் கைதானார். பின்னர் 1940இல் நடந்த சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்ததால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கிருக்கும்போதே விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதம் சிறைவாசம் முடிந்து திரும்பிய காமராஜர் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.

சிறைத் தண்டனை

பதவியை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லையெனில் அந்தப் பதவி எதற்கு என்பதே அவரின் கொள்கையாக இருந்தது. இதை முன்னிறுத்தியே அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்து 1942இல் ஆகஸ்ட் புரட்சி. இதில் காமராஜருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

 சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்ட காமராஜர், அடுக்கு மொழியில் பேசுவதில் வல்லவர் அல்ல. ஆயினும் எதார்த்த பேச்சுக்கு சொந்தக்காரர். மொழி புரியாதவர்களும் காமராஜரின் பேச்சை நிதானமாக கேட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.

சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் கட்சியில் செயலாளராக இருந்தார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர்

இந்தியா சுதந்திரம் அடைந்த போது காமராஜர் சத்தியமூர்த்தி வீட்டிலேயே தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். 1953இல் ஆந்திரா பிரிவு, குலக் கல்வி திட்டம் என ராஜாஜியின் மரியாதை மெல்ல சரிந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில்தான், காமராஜர் சென்னை மாகாண (தமிழ்நாடு) முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இவரின் அமைச்சரவையில் எட்டு பேர் மட்டுமே அமைச்சராக இருந்தனர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி. சுப்பிரமணியம் அவரை முன்மொழிந்த பக்தவச்சலம் ஆகியோரையும் காமராஜர் அமைச்சர் ஆக்கினார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர்

திமுகவின் கொள்கையை ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்றவர்களான ராமசாமி படையாட்சி மற்றும் மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோரும் காமராஜரின் அரசில் பங்கெடுத்திருந்தனர்.

காமராஜரின் ஆட்சியில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அவர் இரட்டை மலை சீனிவாசனின் பேரனான பரமேஸ்வரனை இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆக்கியது.

கல்வி வளர்ச்சி

தமிழ்நாட்டில் காமராஜரின் ஆட்சிக் காலம் பொற்காலம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில், ஆங்கிலேயர் ஆட்சியில் 7 சதவீதமாக இருந்த கல்வி, காமராஜர் ஆட்சிக்காலத்தில் 37 விழுக்காடாக உயர்ந்தது. 1960களில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

 பின்னர் இந்தத் திட்டம் அதிமுக நிறுவனர் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரால் சத்துணவு திட்டமாக விரிவுப்படுத்தப்பட்டது.

அணைத் திட்டங்கள்

கல்வி மட்டுமின்றி நீர் வளத்துக்கும் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

• பவானித்திட்டம்

• மேட்டூர் கால்வாய்த்திட்டம்

• காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்

• மணிமுத்தாறு

• அமராவதி

• வைகை

• பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்

• சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு திட்டங்கள் ஆகியவை காமராஜர் செயல்படுத்திய திட்டங்கள் ஆகும்.

அதுமட்டுமின்றி குமரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்க மாத்தூர் தொட்டி பாலம் திட்டத்தை நிறைவேற்றினார்.

பொது நிறுவனங்கள்

பொதுத்துறை நிறுவனங்களை பொறுத்தவரை அவர் காலத்தில்,

• பாரத மிகு மின் நிறுவனம்

• நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

• மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)

• இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)

• நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை

• கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

• மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

என ஏராளமான தி்ட்டங்கள் இவரது ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. காமராஜர் தமிழ்நாட்டில் 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். மூன்று முறை முதலமைச்சராக இருந்த காமராஜர், தான் முன்மொழிந்த திட்டத்தின்படி (கே பிளான்- காமராஜர் திட்டம்) தனது முதலமைச்சர் பதவியை துறந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார்.

கிங் மேக்கர்

கட்சியிலும் ஆளுமைமிக்க தலைவராகவே காமராஜர் திகழ்ந்தார். நேரு மறைவுக்கு பின்னர் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமர் பொறுப்புக்கு கொண்டுவந்ததிலும், லால் பகதூர் சாஸ்திரியின் எதிர்பாராத மறைவுக்கு பின்னர் இந்திரா காந்தியை பிரதமர் ஆக்கியதிலும் காமராஜரின் பங்கு அளப்பரியது.

இவரை கிங் மேக்கர் என அழைக்கவும் இதுவே காரணம்.

காமராஜர் குறித்து பெரியார்

காமராஜர் அரசியலில் தூய நேர்மையை கடைப்பிடித்தார். பதவியால் மக்களுக்கு பயன் கிடைக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்தப் பதவி எதற்கு என்ற கொள்கையில் தெளிவாக இருந்தார். கடைசிவரை அதைப் பின்பற்றவும் செய்தார்.

தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும்

ஆகையால்தான் பகுத்தறிவு சுடரொளி தந்தை பெரியார், “தமிழ்நாட்டில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக இல்லாத மறுமலர்ச்சியை காமராஜர் ஆட்சியில் பார்க்கிறேன். ஊர்தோறும் தொழில் வளம் ஏற்பட்டுள்ளது. இது மூவேந்தர் காலத்தில் கூட நிகழாதது” என்றார்.

எம்ஜிஆர்- கருணாநிதி

“காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி” என்றார் எம்ஜிஆர். “தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர் காமராஜர்” என்றார் கருணாநிதி.!

கறுப்பு காந்தி என அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் காந்தியின் பால் பெருமதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். அவரின் பிறந்ததினத்திலே மறையவும் செய்தார். தமிழ்நாட்டில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது.


புதன், 14 அக்டோபர், 2020

தொல்காப்பியம்

 பா வகைகள் 

தொல்காப்பியம்*

*வினா/விடைகள்:*


1. முழுமையாகக் கிடைத்த முதல் தமிழ் இலக்கண நூல் எது?

விடை:    தொல்காப்பியம்.

2. தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?

விடை:    தொல்காப்பியர்.

3. தமிழில் உள்ள இலக்கண நூல்களுள் மிகப் பெரியது எது?

விடை:    தொல்காப்பியம்.

4.தொல்காப்பியம் எவ்விலக்கணத்தைக் கூறும் நூலாகும்?

விடை:    ஐந்திலக்கணத்தையும்.

5. ஐந்திலக்கணங்கள் யாவை?

விடை:

1. எழுத்து இலக்கணம்

2. சொல் இலக்கணம்

3. பொருள் இலக்கணம்

4. யாப்பு இலக்கணம்,

5. அணி இலக்கணம்.

6. தொல்காப்பியர் எவ்வூரில் வாழ்ந்தார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்?

விடை:    காப்பிக்காடு.

7. காப்பிக்காட்டின் முற்காலப் பெயர் என்ன?

விடை:    காப்பியக்காடு.

8. காப்பிக்காடு {அ} காப்பியக்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?

விடை:    கன்னியாகுமரி மாவட்டத்தில்.

9. தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் இயற்றியவர் யார்?

விடை:    பணம்பாரனார்.

10. பணம்பாரனார் இயற்றிய சிறப்புப் பாயிரப் பாடலின் அடி எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    பதினைந்து.

11. பணம்பாரனார் எவ்வூரில் வாழ்ந்தார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்?

விடை:    பனம்பழஞ்சி.

12. பணம்பாரனார் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு, தெற்கு எல்லைகள் எவை?

விடை:    வடக்கு – வேங்கடமலை, தெற்கு – குமரிமலை.

13. வேங்கடமலையின் தற்போதைய பெயர் யாது?

விடை:    திருப்பதி.

14. தொல்காப்பியர் எம்மன்னன் அவையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றம் செய்தார்?

விடை:    பாண்டிய மன்னனின்.

15. தொல்காப்பியர் யார் தலைமையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றம் செய்தார்?

விடை:    அதங்கோட்டாசான்.

16. அதங்கோட்டாசான் எவ்வூரில் வாழ்ந்தார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்?

விடை:    அதங்கோடு.

17. பனம்பழஞ்சி, அதங்கோடு ஆகிய ஊர்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?

விடை:    கன்னியாகுமரி மாவட்டத்தில்.

18. ஐந்திரம் எம்மொழி இலக்கண நூல்?

விடை:    வடமொழி.

19, ஐந்திரம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

விடை:    ஐந்திரன்.

20. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    ஆயிரத்து அறுநூற்று இரண்டு.

21. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    மூன்று.

22. தொல்காப்பிய அதிகாரங்களின் பெயர்கள் யாவை?

விடை:

1. எழுத்ததிகாரம்

2. சொல்லதிகாரம்

3. பொருளதிகாரம்.

23. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    இருபத்தேழு.

24. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இடம்பெற்றுள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    நானூற்று எண்பத்து மூன்று.

25.தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இடம்பெற்றுள்ள இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    ஒன்பது.

26. தொல்காப்பிய எழுத்ததிகார இயல்கள் யாவை?

விடை:

1. நூன்மரபு / நூல் மரபு

2. மொழிமரபு

3. பிறப்பியல்

4. புணரியல்

5. தொகைமரபியல்

6. உருபியல்

7. உயிர் மயங்கியல்

8. புள்ளி மயங்கியல்

9. குற்றியலுகரப் புணரியல்.

27. தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் இடம்பெற்றுள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    நானூற்று அறுபத்து மூன்று.

28. தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    ஒன்பது.

29. தொல்காப்பியச் சொல்லதிகார இயல்கள் யாவை?

விடை:

1. கிளவியாக்கம்

2. வேற்றுமையியல்

3. வேற்றுமை மயங்கியல்

4. விளி மரபு

5. பெயரியல்

6. வினையியல்

7. இடையியல்

8. உரியியல்

9. எச்சவியல்.

30. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    அறுநூற்று ஐம்பத்தாறு.

31. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:    ஒன்பது.

32. தொல்காப்பியப் பொருளதிகார இயல்கள் யாவை?

விடை:

1. அகத்திணையியல்

2. புறத்திணையியல்

3. களவியல்

4. கற்பியல்

5. பொருளியல்

6. மெய்ப்பாட்டியல்

7. உவமையியல்

8. செய்யுளியல்

9. மரபியல்.

33. தொல்காப்பியத்தில் எழுத்து இலக்கணத்தைக் கூறும் பகுதி எது?

விடை:    எழுத்ததிகாரம்.

34. தொல்காப்பியத்தில் சொல் இலக்கணத்தைக் கூறும் பகுதி எது?

விடை:    சொல்லதிகாரம்.

35. தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணத்தைக் கூறும் இயல்கள் யாவை?

விடை:    அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல்,

மெய்ப்பாட்டியல், மரபியல்.

36. தொல்காப்பியத்தில் யாப்பு இலக்கணத்தைக் கூறும் இயல் எது?

விடை:    செய்யுளியல்.

37. தொல்காப்பியத்தில் அணி இலக்கணத்தைக் கூறும் இயல் எது?

விடை:    உவமையியல்.

38. நூற்பா எண்ணிக்கை அடிப்படையில் தொல்காப்பியத்தில் மிகச் சிறிய இயல் எது?

விடை:    எழுத்ததிகாரம் / பிறப்பியல் / இருபத்தொன்று நூற்பாக்கள்.

39. நூற்பா எண்ணிக்கை அடிப்படையில் தொல்காப்பியத்தில் மிகப் பெரிய இயல் எது?

விடை:    பொருளதிகாரம் / செய்யுளியல் / இருநூற்று முப்பத்தைந்து நூற்பாக்கள்.

40. தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் யார்?

விடை:    இளம்பூரனர்.

41. தொல்காப்பியத்திற்கு முதலில் உரை செய்தவர் யார்?

விடை:    இளம்பூரனர்.

42. நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்தின் எவ்வியல்களுக்கு மட்டும் உரை செய்யவில்லை?

விடை:    மெய்ப்பாட்டியல், உவமையியல், மரபியல்.

43. தொல்காப்பிய செய்யுளியலுக்கு நச்சினார்க்கினியர் செய்த உரை முழுமையாகக் கிடைத்துள்ளதா?

விடை:  சில பகுதிக்குக் கிடைக்கவில்லை.

44. தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை செய்தவர்கள் யாவர்?

விடை:    சேனாவரையர், தெய்வச் சிலையார், கல்லாடர்.

45. கல்லாடர் செய்த உரையில் தற்பொழுது எதுவரை கிடைத்துள்ளது?

விடை:   இடையியல் பதிமூன்றாம் நூற்பா வரை.

46. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு மட்டும் உரை செய்தவர் யார்?

விடை: பேராசிரியர்.

47. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் பேராசிரியர் செய்த உரையுள், எவ்வியல்களுக்கான உரை மட்டும் தற்பொழுது கிடைத்துள்ளது?

விடை    மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல்.

48. தொல்காப்பியம் ‘தமிழர்களின் உயிர் நூல்’ என்று கூறியவர் யார்?

விடை:    வ.சுப.மாணிக்கனார்.

சிற்றலை 3 அடி பேரெல்லை ஆயிரம் அடி ஆசிரியப்பாவின் அளவிற்கு ஆ ஆசிரியப்பாவின் அளவிற்கு 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

சிலப்பதிகாரம் மதுரை காண்டம்

 1. மாங்காட்டு மறையோன் மதுரை செல்ல எத்தனை வழிகளை கூறினான் 3

2. பிறைமதி சூடிய பெரியோன் இந்திய முத்தலை சூலம் போல அமைந்ததாக மாங்காட்டு மறையோன் கூறியது யாது மூன்று வழிகளை
3. வலப்பக்க வழியில் அமைந்த மரங்கள் யாவை வெண்கடம்பு ஊமை வாகை மூங்கில்

4. திருமால் குன்றம் ஆகிய அழகர்மலை எப்ப வழியில் அமைந்துள்ளது இடப்பக்க வழி

5. கோவலன் முன் தோன்றிய மயக்கும் தெய்வத்தை அரிய ஓதியம் மந்திரம் எது

அந்தரி மந்திரம்

6. சாலினி எக் குடியில் பிறந்தவள்

 மறவர் குடி

7. இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி தென்தமிழ் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமாமணி என்று கண்ணகியை பாராட்டி உரைத்தது யார்

 ஷாலினி

8. பேதுறவு பொழிந்தனள் மூதாட்டி என்று கூறி நகைத்தவள் யார்

கண்ணகி

9. இடக் காலில் சிலம்பும் வலக் காலில் வீரக் கழலும் ஒலிக்கும் சிறிய அடிகளை உடையவள் யார் 

கொற்றவை

10. கொற்றவை அணியாக கொண்டவற்றை தனக்கு அணியாகக் கொண்டு நிற்கும் பொற்றொடி நங்கை யார் ஷாலினி

10. எயினர் குல கடவுள் யார் ஐயை

11.

சனி, 3 அக்டோபர், 2020

தொல் அகத்திணையியல்

 ஆயர் வேட்டுவர் ______ திணைப்பெயர்

ஆடூஉத்
2. அகத்திணையில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை
58
3.அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரை இலபுறத் தென்மனார் புலவர்- இதில் புறத்து என்பதன் பொருள்
புறத்து என்பது புறத்திணைகளைக்குறிக்கும் அவை
கைக்கிளை
பெருந்திணை
4.உலகத்துப்பொருள்களெல்லாம்......ஆகி அடங்கும்
5.மக்கள் ஞுதலிய ------ திணையும் சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்
அகன் ஐந்திணை
6.முண்டகப்பூ எந்த திணைக்கு உரியது?
நெய்தல்
7.. முதற் பொருளை விட கருவும், கருவை விட உரியும் சிறந்தவனாக கொள்ளப்படும் என்றவர் -----
நச்சினார்க்கினியர்
8. வேனிற்காலத்தில் தளிரும் சினையும் வாடுதல் இன்றி நிற்பது ------
பாலை மரம்
9. நால்வகை நிலத்திலும் மயங்கும் திணைகள் ----- -----
கைக்கிளை, பெருந்திணை
10. கைக்கிளைக்குரிய உரிப்பொருள்கள் -----
2
11.. சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் இது யார் கூற்று -----
கண்டோர்
12. உள்ளுறை ---- நீங்கிய புற கருப்பொருள்கள்
நிலைக்களமாக அமையும்.
தெய்வம்
13.. கருப்பொருள்களில் பூ, பறவை ஆகியவை மயங்கும் என்றவர் -----
இளம்பூரணர்
14. கொண்டுதலை கழிதல் எத்திணைக்கு உரியது -----
பாலை
15. -----அனைத்து திணைகளுக்கும் உரிய மரமாக கருதப்படுகிறது.
தேக்கு
16. முந்நீர் வழக்கம் -----
வோடு இல்லை.
மகடூஉ
17. அயலோர் ஆயினும் ...........மேற்றே

அகற்சி

18. தோழி கேஎத்துங் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து ......... புலம்பலும்

நற்றாய்

19. நடுவு நிலைத் திணையே ............,?..........,முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே

நண்பகல் வேனிலொடு

20....... என்பது
இராப்பொழுதின் நடு கூறு ஆகும்

யாமம்

21. தொல்காப்பியர் அகத்திணை இயலில்.............. உரிய மக்கள் குறித்து கூறுகிறார்

எழு திணைக்கும்

22. ஒரு திணைக்குரிய...
....... இன்னொருத்தனுக்கு மயங்கு வராது

நிலம்

23. அரசன் தானே தலைமை ஏற்று படை நடத்தி செல்வது ..........பிரிவு

தணிவினை பிரிவு

24. அரசனை அரசனை சார்ந்துள்ள ஏனையோர் அரசன் சார்பில் பிதலைமை ஏற்று பிரிவது..........

வேந்தர் குற்றுழிப்பிரிவு

25. மேலோர் முறைமை........... உரித்தே

நால்வர்க்கும்

26. ..........பாங்கின் பின்னோர் ஆகுப மன்னர்
27. தொல்காப்பியம் அகத்திணை இயல் கூறும் நில வரிசை முறை
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்
28. அறுவகை பருவமும் எந்தெந்த நிலத்திற்கு பொருந்தும்?
மருதம் நெய்தல்
29. வைகறை காலமும் விடியற்காலம் எந்த நிலத்திற்கு உரியன?
மருதம்
30. ஆவணித் திங்களும் புரட்டாசித் திங்களும் குறிக்கும் காலம் எது?
கார் காலம்
31. வருணன் மேய ____________ உலகமும் பெருமணல்
32. மாயோன் மேய -–------உலகமும்
காடுறை
33. சேயோன் மேய -------உலகமும் அனைவரை மைவரை

34. வேந்தன் மேய ---------உலகமும் தீம்புனல்

35

வியாழன், 1 அக்டோபர், 2020

சமய இலக்கிய உரையாசிரியர்கள்

 சமய இலக்கிய உரையாசிரியர்கள்

1. பன்னிரு திருமுறை களுக்கு உரை எழுதக் கூடாது என்னும் கொள்கை உடையவர்கள்

சைவர்கள்

2. திருவாசகத்திற்கு உரை எழுதியவர்கள் சீர்காழி தாண்டவராயர் ,
கா .சு .பிள்ளை 
பண்டிதமணி மு.கதிரேசனார்

3. திரு மந்திரத்திற்கு உரை எழுதியவர் திருச்சிரபுரம் சிவனாந்த சாகர யோகீஸ்வரர் நவநீத கிருஷ்ண பாரதி,
 பேராசிரியர் சுப அருணாச்சலம்

4. பெரிய புராணத்திற்கு விரிவுரை எழுதியவர் 
சிவகவிமணி சி. கே .சுப்ரமணியனார்

5. திருவாசகத்தின் சில பாடல்களுக்கு கதிர்மணி விளக்கம் என்ற பெயரில் உரை எழுதியவர் யார் 
பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

6. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு மணிப்பிரவாள நடையில் உரை எழுதியவர்கள் யார் 
வைணவர்கள்

7. வைணவர்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்கு உரை எழுதிய நூற்றாண்டு பதினான்காம் நூற்றாண்டு 
பதினைந்தாம் நூற்றாண்டு 

8. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை எவ்வாறு அழைக்கப்படுகிறது
 வியாக்கியானங்கள்

9. திருவாய்மொழிக்கு முதன் முதலில் உரை வகுத்தவர் யார் 
ஆளவந்தார்

10. ஆளவந்தார் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர் 
பதினொன்றாம் நூற்றாண்டு

11. திவ்ய பிரபந்தம் முழுமைக்கும் உரை எழுதியவர் 
பெரியவாச்சான் பிள்ளை


12. நம்மாழ்வாரின் பாடல்களுக்கு உரை இவ்வாறு அழைக்கப்படுகிறது 
ஈடு

13. மற்ற ஆழ்வார்களின் பாடல்களில் உரை எவ்வாறு அழைக்கப்படுகிறது வியாக்கியானம்

14. திருவாசகத்திற்கு தாண்டவராயர் உரை எழுதிய ஆண்டு
1769

15. நஞ்சியர்

.மைசூர் கங்கோரையை சேர்ந்த வேதாந்தி
இயற்பெயர் மாதவா சார்யா
சிறப்புப் பெயர் சீரங்கநாதர்
 *நஞ்சீயர் வைணவர் ஆக்கியவர் பட்டர் *ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யத்தில் எண்ணிக்கையை பின்பற்றி திருவாய்மொழிக்கு 9000 படி இயற்றினார் *பெரியதிருமொழி ,திருப்பள்ளி எழுச்சி ,கண்ணிநுண் சிறுதாம்பு உரை செய்துள்ளார் *நஞ்சீயரின் மாணவர் நம்பிள்ளை


16.நம்பிள்ளை

பிறந்த ஊர் திருவரங்கத்திற்கு அருகில் உள்ள  நம்பூர்
வரதராசன் என்ற பெயரும் உண்டு 14ஆம் நூற்றாண்டு
திருவாய்மொழிக்கு  9ஆயிரம் படி உரை எழுதியவர்
பெரிய திருமொழி திருப்பள்ளி எழுச்சி திருவிருத்தம் உரை எழுதியுள்ளார்